முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள்

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள்

ஒருநாள் பொழுதில் கபிலரும் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்பொழுது மன்னன் கபிலரின் கையைப் பற்றிக்கொண்டு “புலவரே உமது கை மிகவும் மென்மையாக உள்ளதே” என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதுகேட்ட கபிலருக்குச் சொல்லவா வேண்டும் உதித்துவிட்டது பாடல்.  
புதுக்கவிதை வடிவம்
கணைய மரங்களின்
காலுறிக்கும் வலிமை
முதல் வேலையே
எதிர்ப்போரை உதிர்த்தல்தான்
இப்படிக் கடுங்கோபம் கொண்ட
சிறுகண்ணுடைய யானையை
வேலைப்பாடு பொருந்திய
அங்குசம் கொண்டு
அதன் அருகில் சென்று

மதத்தை அடக்கி வீரத்தைக்
காட்டி நிற்கின்ற கைகள் அது..
பாதாளக் கிணற்றைக்
கவனமாய்க் கடப்பதற்கு
குதிரையின் பிடிவாரை
சுண்டி இழுக்கின்ற கைகள் அது..
நயமிக்க தேரில்
நின்றுகொண்டு எதிரிகளை
அன்பால் முடியாது என்று
அம்பால் வீழ்த்த
வில்லினை இழுத்து விடுகின்ற கைகள் அது..
இத்தனை வேலைகளைச் செய்யும்
உன் கைகள்
பஞ்சுபோல் இருக்க வாய்ப்பில்லை
அதுதான் இறுகிப்போய் உள்ளன..
நாங்கள் அவ்வாறில்லை..
காய்களையும் கறிகளையும் உண்டு
உடல் வருத்தி
வேலை செய்யும் பழக்கமில்லை
உன்னைப் பாடுவதைத் தவிர
வேறு ஒன்றும் அறியோம்..
ஆதலால்தான் எங்கள் கைகள்
மெலிந்தனவாய் உள்ளன..
செய்யுள்
கடுங்கண்ண கொல்களிற்றால்
காப்புடைய எழுமுருக்கிப்
பொன்னியல் புனைதோட்டியான்
முன்பு துரந்து சமம் தாங்கவும்
பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
வலிய வாகுநின் தாள் தோய் தடக்கை
புலவு நாற்றத்து பைந்தடி
பூ நாற்றத்த புகைகொளீஇ ஊன் துவை
கறி சோறுண்டு வருந்து தொழிலல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின் அன்றும்
கார் அணங்காகிய மார்பில் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மைச்
செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே (புறம் .14)
                          திணை – பாடாண் திணை
                          துறை – இயன்மொழித்துறை
உரைவடிவம்
காவலுக்கான கணைய மரத்தை முறித்து கொலைத்தொழிலை விரும்பிச் செய்யும் வலிமை பொருந்திய யானையை அழகுடைய இரும்பால் செய்யப்பட்ட அங்குசம் கொண்டு அடக்குபவன் நீ. பிளந்து கிடந்த கிடங்கு ஒன்றில் ஆழமான நிலையில் நீர் நிரம்பிக் கிடக்க அதனுள் செல்லாமல் தாண்டிக் கடத்தற் பொருட்டு குதிரையின் கயிற்றை இழுத்துப் பிடிக்கும் கைகள் உன் கைகள் அம்பறாத்தூணி பொருந்திய தேரினுள் வடு பொருந்தும்படி வில்லினை ஏவுதற்குரிய வலிய கைகள் பரிசு பெறுபவர்களுக்கு ஆபரணங்களை வாரி வழங்குதற்குரிய கைகள் ஆதலால் நின் கைகள் வலியனவாக உள்ளன. புலால் நாற்றமுடைய புதிய ஊனைச் சமைத்து உண்ணுதலையும் உடலினை வருத்தி வேறு தொழில் ஏதும் செய்யாததாலும் பாடுதல் தொழிலையுடைய எமது கைகள் மென்மையாக உள்ளன.
அருஞ்சொற்பொருள்

எழு – கணைய மரம், சமம் – வேண்டும் அளவு, குசை – சாட்டி, பிடிவார், புறம் – முதுகு, சாபம் – வில், செவ்விததடி-புதிய ஊன் கறி

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழமொழி ஐந்நூறு

                                             பழமொழி 500 அனைவருக்கும்  தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து உதவியவர். ஏ.மேனகா, கணினி-வணிகவியல் துறை மாணவி, கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவி, திருச்செங்கோடு. 1)அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் 2)அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் 3)அடியாத மாடு படியாது 4)அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் 5 )அத்திப் பூத்தாற் போல் 6)அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா? 7)அரசனை நம்பி புருஷனைக் கைவிடலாமா? 8)அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் 9)அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் 10)அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும் 11)அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 12)அறிவே சிறந்த ஆற்றல் 13)அனுபவமே சிறந்த  ஆசான் 14)அன்பே கடவுள் 15)ஆசைக்கு அளவில்லை 16)ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம் 17)ஆணுக்கு ஒரு நீதி.. பெண்...

தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்

    தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள்  செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்               - முனைவர் ம.லோகேஸ்வரன்       கொங்குதேர் வாழ்க்கையுடைய அஞ்சிறைத்தும்பியைக் காமம் செப்பாமல் கண்டதைச் சொன்னதிலிருந்து தமிழாய்வு தொடங்கிவிட்டது என்பர். அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் ஒரு தமிழ்ப்படைப்பு வெளியிடப்பெற்றுச் சான்றோர் பலரின் முன்னிலையில் விவாதங்களுக்கு உட்பட்டு கருத்தறிந்து மேற்கொள்ளப்பெற்றுள்ளது. இதற்குத் தொல்காப்பியம் முதலான பண்டை இலக்கியங்கள் தக்கச் சான்றுகளாகும். சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம், உரைச்சிறப்புப் பாயிரம் என்ற வகைப்பாடுகளெல்லாம் பனுவல் மீதான  ◌ாவசிப்பு மரபினை வெளிப்படுத்துகின்றன. வகை தொகைப்படுத்துதல், துறைக்குறிப்பு, கூற்றுக்குறிப்பு, உரையாக்கம் என்கிற வகைப்பாடுகளும் வாசிப்புப் பின்னணியில் நேர்ந்தவைகளேயாகும். ஆகவே ஒரு பனுவலை வாசித்தல் என்கிற பாரம்பரிய முறைமை ககாலத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. அஃது இன்றளவில் வாசிப்பு, ஆய்வு என்கிற இருநிலைகளில் வெவ்வேறு பொருள்பட நிற்கின...

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்லூரியில் நிகழ்த்தப்பெற்ற பேராசிரியரின் நூல்கள் முன்னெடுக்கும் ஆய்வு முறையியல் பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் கட்டுரை அளிக்க  வாய்ப்பமைந்தது. வாழ்க்கையில் உண்டான வரலாற்றுத் தருணம்.         நன்றி பேரா சு.தமிழ்வேலு, பேரா.இரா.அறவேந்தன், பேரா.சிலம்பு நா.செல்வராசு)  கட்டுரை கீழ்வருமாறு     தமிழியல் ஆய்வு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்தேறியுள்ளன. அவை காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அமைந்தவை. அவ்வகையில் இக்காலத் தமிழியல் ஆய்வு வரலாற்றில் தவிர்க்கவியலா ஆளுமையாகத் திகழ்பவர் சிலம்பு நா.செல்வராசு. இவரது ஆய்வுப் போக்குகள் தனித்தன்மை வாய்ந்தவை. அத்தகைய தன்மைகள் வழியாகத் தமிழியல் ஆய்வு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதும் அடுத்தத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய ஆய்வியல் சிந்தனைகளை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். 1.தமிழாய்வுத்தடம் 1887 ஆம் ஆண்டு சி.வை.தா.வ...