புதன், 24 ஆகஸ்ட், 2016

சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல் பரத்தையும்

சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல்                              பரத்தையும்

பண்டைக் காலத்தில் ஆண், பெண் உறவுமுறையினூடாக நம் முன்னோர்களின் குடும்பப் பின்னனியை ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடிகிறது. திணை அடிப்படையில் நிலத்தினைப் பிரித்து ஒவ்வொரு (குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை) நிலத்திற்கும் ஒவ்வொரு வகையான ஒழுக்கங்களை (பழக்கவழக்கங்கள் என்று ஊகித்துக்கொள்க) சுட்டியுள்ளனர். இவற்றுள் மருதத்திணை ஏனைய திணைகளைக் காட்டிலும் குடும்பப் பின்னனியைச் சார்ந்தது என்று குறிப்பிடலாம். தலைவன்,தலைவி,தோழி மூவரும் முக்கியக் கதாபாத்திரங்கள். இம்மூவருக்குமிடையேதான் பெரும்பாலும் உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. அப்படி உரையாடும் பொழுது வெறும் கருத்தை மட்டுமே கூறுவதாகப் புலவர்கள் பாடலைப் புனையவில்லை. இயற்கையை வருணித்து அதனூடாகத் மாந்தர்களது உணர்வுகளைப் பதிவு செய்துள்ளனர். அப்படி ஒரு அருமையான குடும்பப் பின்னனியில் அமைந்துள்ள கருத்து வருமாறு:  
  தலைவி கர்ப்பமடைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள். ஆனால் தலைவன் குழந்தையை ஈன்றுள்ள தனது மனைவியை விட்டு நீங்கி பரத்தையரிடம் சென்று அவளுடன் வாழ்ந்து வருகிறான். இப்படியே பல நாட்கள் கழிந்த பின்பு திடீரென மனைவியும் குழந்தையும் நினைவுக்கு வர மீண்டும் தனது இல்லத்தை நோக்கி வருகிறான். இப்போது தலைவனை நோக்கி தலைவி மெல்லிய கோபத்துடன் பேசுகிறாள்அந்தப் பேச்சு அத்தனை அழகு வாய்ந்தது. கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்..!
         பழனப் பல்மீன் அருந்த நாரை
         கழனி மருதின் சென்னிச் சேக்கும்
         மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
         தூயர் நறியர் நின்பெண்டிர்
         பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே
                   (ஐங்குறுநூறு - 70)
புதுக்கவி வடிவம்                                                                              
எல்லோரும் பயன்படுத்துகின்ற
அழகுமிகு குளம்..
சிறிய குளம் என்றாலும்
அதில் எத்தனை வகை மீன்கள்..
அடடா கண்கொள்ளாக் காட்சி..
அதோ
துள்ளித் திரிந்த
ஏதோ ஒரு வகை மீனை
எங்கிருந்தோ பறந்து வந்த
அந்த நாரை
கொத்தித் தூக்கிக் கொண்டு செல்கிறது..
தூக்கிக் கொண்டு எங்கு சென்றது..?
அதோ
வயல்வரப்பில் வளர்ந்துள்ள
மருத மரத்தின் உச்சிக்கே
கொண்டு சென்றது..
தண்ணீரில் இருந்த மீன் இப்போது
மரத்தின் உச்சியில்..
உயிர் மட்டும் இல்லை அவ்வளவுதான்..
இத்தகைய வளமைக்குக் காரணம்
பெருக்கெடுத்து ஓடுகின்ற நீர்தான்.. 
இப்படி வளமை மிக்க
ஊருக்குச் சொந்தக்காரனே..!
நான் பிள்ளையைப்
பெற்றுவிட்டதால்
உன் கண்களுக்கு இப்போது
நான் பேய் போன்று
தெரிகின்றேன் அல்லவா...?
என்னைவிட உன் பரத்தையரே
தூயவர்
நறுமணம் மிக்கவர்
ஆகையால் நீ
அங்கேயே செல்வாயாக
என் அன்புக் கணவனே..!
உரைவடிவம்
  எல்லோருக்கும் பொதுவான ஒரு நீர்நிலையில் பலவகையான மீன்கள் துள்ளித்திரிந்ததைக் கண்ட நாரை மீன் ஒன்றைக் கவ்விக்கொண்டு மருத மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்று அமர்ந்தது. இத்தகைய வளத்திற்குக் காரணமான நீர்ரிலையை உடைய ஊரனே! நான் குழந்தையைப் பெற்றதால் நான் பேய் போன்று இருப்பதாகக் கருதிப் பரத்தையரை நாடிச் சென்றாய். செல்வாயாக என்னை விட பரத்தையரே தூயவர். நறுமணம் வீசக்கூடியவர்.
பெறக்கூடிய கருத்து
மனைவி  கர்ப்பமடைந்துள்ள காலத்தில் தலைவன் பரத்தையை நாடிச் சென்றுள்ளான்
சென்னி என்றால் தலை, உச்சி என்று பொருள். சென்னிமலை எனும் ஊர் ஈரோடு பகுதியில் உள்ளது. இதற்கு உச்சிமலை என்று பொருள் கொள்ளலாம். இவ்வூர்ப் பெயர் சங்க காலத்தைய சொல்லாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நாரையாகிய தலைவன் பல்வகை மீன்களாகிய பல பரத்தையரோடு உறவுகொண்டு பழனமாகிய அவர்களது இல்லத்தில் வாழ்ந்து வந்தான். மருதமாகிய அவனது சொந்த இல்லத்தை மறந்து விட்டு என்பது இதனுள் பொதிந்து கிடக்கும் பொருள்.

பேய் எனும் நம்பிக்கை சார்ந்த சொல் கையாளப்பெற்றுள்ளது.
எழுத்தாணி  /  at  ஆகஸ்ட் 24, 2016  /  2 comments

சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல்                              பரத்தையும்

பண்டைக் காலத்தில் ஆண், பெண் உறவுமுறையினூடாக நம் முன்னோர்களின் குடும்பப் பின்னனியை ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடிகிறது. திணை அடிப்படையில் நிலத்தினைப் பிரித்து ஒவ்வொரு (குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை) நிலத்திற்கும் ஒவ்வொரு வகையான ஒழுக்கங்களை (பழக்கவழக்கங்கள் என்று ஊகித்துக்கொள்க) சுட்டியுள்ளனர். இவற்றுள் மருதத்திணை ஏனைய திணைகளைக் காட்டிலும் குடும்பப் பின்னனியைச் சார்ந்தது என்று குறிப்பிடலாம். தலைவன்,தலைவி,தோழி மூவரும் முக்கியக் கதாபாத்திரங்கள். இம்மூவருக்குமிடையேதான் பெரும்பாலும் உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. அப்படி உரையாடும் பொழுது வெறும் கருத்தை மட்டுமே கூறுவதாகப் புலவர்கள் பாடலைப் புனையவில்லை. இயற்கையை வருணித்து அதனூடாகத் மாந்தர்களது உணர்வுகளைப் பதிவு செய்துள்ளனர். அப்படி ஒரு அருமையான குடும்பப் பின்னனியில் அமைந்துள்ள கருத்து வருமாறு:  
  தலைவி கர்ப்பமடைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள். ஆனால் தலைவன் குழந்தையை ஈன்றுள்ள தனது மனைவியை விட்டு நீங்கி பரத்தையரிடம் சென்று அவளுடன் வாழ்ந்து வருகிறான். இப்படியே பல நாட்கள் கழிந்த பின்பு திடீரென மனைவியும் குழந்தையும் நினைவுக்கு வர மீண்டும் தனது இல்லத்தை நோக்கி வருகிறான். இப்போது தலைவனை நோக்கி தலைவி மெல்லிய கோபத்துடன் பேசுகிறாள்அந்தப் பேச்சு அத்தனை அழகு வாய்ந்தது. கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்..!
         பழனப் பல்மீன் அருந்த நாரை
         கழனி மருதின் சென்னிச் சேக்கும்
         மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
         தூயர் நறியர் நின்பெண்டிர்
         பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே
                   (ஐங்குறுநூறு - 70)
புதுக்கவி வடிவம்                                                                              
எல்லோரும் பயன்படுத்துகின்ற
அழகுமிகு குளம்..
சிறிய குளம் என்றாலும்
அதில் எத்தனை வகை மீன்கள்..
அடடா கண்கொள்ளாக் காட்சி..
அதோ
துள்ளித் திரிந்த
ஏதோ ஒரு வகை மீனை
எங்கிருந்தோ பறந்து வந்த
அந்த நாரை
கொத்தித் தூக்கிக் கொண்டு செல்கிறது..
தூக்கிக் கொண்டு எங்கு சென்றது..?
அதோ
வயல்வரப்பில் வளர்ந்துள்ள
மருத மரத்தின் உச்சிக்கே
கொண்டு சென்றது..
தண்ணீரில் இருந்த மீன் இப்போது
மரத்தின் உச்சியில்..
உயிர் மட்டும் இல்லை அவ்வளவுதான்..
இத்தகைய வளமைக்குக் காரணம்
பெருக்கெடுத்து ஓடுகின்ற நீர்தான்.. 
இப்படி வளமை மிக்க
ஊருக்குச் சொந்தக்காரனே..!
நான் பிள்ளையைப்
பெற்றுவிட்டதால்
உன் கண்களுக்கு இப்போது
நான் பேய் போன்று
தெரிகின்றேன் அல்லவா...?
என்னைவிட உன் பரத்தையரே
தூயவர்
நறுமணம் மிக்கவர்
ஆகையால் நீ
அங்கேயே செல்வாயாக
என் அன்புக் கணவனே..!
உரைவடிவம்
  எல்லோருக்கும் பொதுவான ஒரு நீர்நிலையில் பலவகையான மீன்கள் துள்ளித்திரிந்ததைக் கண்ட நாரை மீன் ஒன்றைக் கவ்விக்கொண்டு மருத மரத்தின் உச்சிக் கிளைக்குச் சென்று அமர்ந்தது. இத்தகைய வளத்திற்குக் காரணமான நீர்ரிலையை உடைய ஊரனே! நான் குழந்தையைப் பெற்றதால் நான் பேய் போன்று இருப்பதாகக் கருதிப் பரத்தையரை நாடிச் சென்றாய். செல்வாயாக என்னை விட பரத்தையரே தூயவர். நறுமணம் வீசக்கூடியவர்.
பெறக்கூடிய கருத்து
மனைவி  கர்ப்பமடைந்துள்ள காலத்தில் தலைவன் பரத்தையை நாடிச் சென்றுள்ளான்
சென்னி என்றால் தலை, உச்சி என்று பொருள். சென்னிமலை எனும் ஊர் ஈரோடு பகுதியில் உள்ளது. இதற்கு உச்சிமலை என்று பொருள் கொள்ளலாம். இவ்வூர்ப் பெயர் சங்க காலத்தைய சொல்லாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
நாரையாகிய தலைவன் பல்வகை மீன்களாகிய பல பரத்தையரோடு உறவுகொண்டு பழனமாகிய அவர்களது இல்லத்தில் வாழ்ந்து வந்தான். மருதமாகிய அவனது சொந்த இல்லத்தை மறந்து விட்டு என்பது இதனுள் பொதிந்து கிடக்கும் பொருள்.

பேய் எனும் நம்பிக்கை சார்ந்த சொல் கையாளப்பெற்றுள்ளது.

Posted in: Read Complete Article»

2 கருத்துகள்:

புதன், 17 ஆகஸ்ட், 2016

பக்கோட்டி

பக்கோட்டி

“மஞ்சுவிரட்டும் மாட்டுவண்டிப்பந்தயமும் நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இத்தடை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது” என்ற செய்தியறிக்கையைக் கேட்டுவிட்டுப் பலருக்கு பதபதைப்பு ஏற்பட்டது உண்மைதான். அதில் பெரும்பாலானோர் மஞ்சுவிரட்டிற்குத் தடை என்பதை எதிர்த்துப் போராடவும் தொடங்கிவிட்டனர்.
 தங்கவேலு எந்த ஊரில் தட்டுவண்டிப் பந்தயம் நடந்தாலும் நடந்தே போய்ச்சேந்துடுவான். கைக்குத் துணையா அவன் மச்சினன் முருகரத்தினமும் கூடவே திரிவான். ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து குடிக்கிறதும் ஊர்நாயம் பேசுறதும் முக்கியமான இடங்கள்ல முக்கியமான ஆள்மாதிரி காட்டிக்கிறதும் இவனுகளுக்குக் கைவந்த கலை. இவய்ங்க நடந்து போன பிறகு பின்னாடி நின்னு புரணி பேசுற ஆள்தான் நிறைய பேர். நேருக்கு நேராக யாரும் பேசுறதில்ல. பேசுனா அன்னைக்கு முழுசும் இவய்ங்க அலப்பறதான். ஊரக்கூட்டி ரெண்டாக்கிப்புடுவாய்ங்க..
அரண்மனைப்பட்டி மாகாணத்தில் தட்டுவண்டிப்பந்தயம் காலங்காலமாக நடத்தி வருகின்ற கோயில் நிகழ்ச்சி. அதிலும் அரிச்சானூர் பந்தயம் என்றால் சிறுசு பெருசு அத்தனையும் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு காலையிலேயே கெளம்பிவிடும்.
தங்கவேலும் முருகரத்தினமும் அன்னைக்குக் வெள்ளெனக் கௌம்பிட்டானுங்க. ஊர்ப்பய எவனும் “ஏம்ப்பா எங்க கௌம்பிட்டீகனு“ கேக்கல. கேக்க யாரும் இன்னும் வீதிக்கு வரல என்பதுதான் உண்மை.
செங்கமங்கலான நேரம். வாயின் முன்பற்களுக்கு இடையில் பீடியை நறுக்கெனக் கடித்தபடி  பேசிக்கொண்டு வந்தான் ரத்தினம். திடீரென
ஆமா மாப்ள இந்த ஊர் பந்தயத்தப் பத்தி கேள்விப்பட்டுருக்கேன். அப்டி என்ன விசேசம்? இந்தக் கேள்விய கேட்டதும் தங்கம் அப்பதான் ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினான். அதுவரை ரத்தினம் பேசியத கவனிக்காத தங்கத்துக்கு இந்தக் கேள்வி மட்டும் மனசுல ஒரு உற்சாகத்த ஏற்படுத்தியிருக்கணும். இப்படி ஒருத்தன் கேட்டுட்டா போதும். தன்னையும் நம்பி ஒருத்தன் கேக்குறானேங்குற மெதப்புல பொளந்து கட்டிடுவான். கிட்டத்தட்ட ஒரு வாத்தியாரு மாதிரி பேச ஆரம்பிச்சுடுவான். அவ்வளவு வரலாறும் அத்துப்புடி.
   மச்சாஆஅன் கருங்காப்பட்டி சங்கரபாண்டித் தேவர் மாடு, மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு, மேலச்சேரி முருகையா அம்பலம் மாடு, மேட்டுக்குடி திருநாவுக்கரசு மாடு, ஒண்டிப்புலி ராக்கன் மாடு, துறையூர் ரத்தினம் மாடு,  கண்டனூர் மாணிக்கஞ் செட்டியார் மாடுனு பெரிய பெரிய தலக்கட்டுக நேரடியாக் களத்துல குதிக்கிற ஊர்தான் அரிச்சானூர். சாதி, அரசியல், பணம் அத்தனையும் குவிஞ்சுகெடக்கும். அரிச்சானூர்ல மட்டும்   ஒருத்தன் தட்டுவண்டி ஓட்டி ஜெயிச்சுட்டானு வை அவன்தான் அடுத்த ஒன்றியக் கவுன்சிலர். இப்டி ஒன்றியக் கவுன்சிலர வச்சு்த்தான் இந்த ஜில்லாவுல தட்டுவண்டிப் பந்தயத்த நடத்திக்கிட்டு இருக்கானுக.  நீ வேணுனா பாருவேன் இப்ப அரசாங்கம் விட்டுருக்க அறிக்கையப் பாத்து ஊர்ப்பயலுக அவ்வளவு பேரும் பந்தயத்த நிறுத்திடுவாய்ங்க. ஆனா அரண்மனைப்பட்டி நாட்டுக்காரனுங்க மட்டும் மாட்ட அவுத்துக்கிட்டே இருப்பானுங்க.
எத்தனப் போட்டி மாப்ள இவனுக நடத்துவாய்ங்க? பான்பராக்கு எச்சிய துப்பிக்கிட்டே ரத்தினம் கேட்டது தங்கத்துக்கு எரிச்சல உண்டாக்கிடுச்சு. தங்கத்துக்கு பான்பராக்கு மட்டும் புடிக்காது. மத்தது எல்லாம் அத்துப்புடி. மச்சானாச்சே திட்ட முடியாம பேச்ச தொடர்ந்தான் தங்கம்.
 பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடுனு மூனு வகையறாவ போட்டி நடத்துவாய்ங்க. இதுல பூஞ்சிட்டுப் பந்தயம் தான் மச்சான் இங்க படுஞ்சுறுசுறுப்பா நடக்கும்.
ஆமா சோனையன் பந்தயத்துல கலந்துக்குறாப்ளயா?
என்ன மச்சான் கேள்விது? சோனையனுக்காகத்தான் பந்தயம் பாக்கவே போறேன்.
பக்கோட்டினா சோனையன். சோனையன்னா பக்கோட்டி னு சும்மாவா சொல்லித்திரியிறானுங்க.
பூஞ்சிட்டு பந்தயத்தில் சோனையன் பெயர் அடிபடாமல் இருக்காது. பக்கோட்டினா அவந்தாய்யா.. அது ரெண்டும் காலா? இல்ல தண்டவாளம் வீலா? அப்டியொரு ஆள இனிப் பாக்கமுடியுமானு ஊர் முழுக்க பேச்சு. முன்னாடிலாம் யாருடைய மாடுனு விசாரிச்சுட்டுத்தான் பந்தய ரசிகர்கள் ஒக்காந்துருப்பானுங்க. இப்போலாம் சோனையன் எந்த வண்டில ஓடுறான்னு தான் கேள்வி.
சோனையன் என்ன சாதி மச்சான்?
தெரியல மச்சான். ஆனா கண்டிக்கருப்ப கும்புடுரவங்கனு ஊருக்குள்ள பேச்சு. அத விடு. அதுவா இப்ப முக்கியம். நீ இப்ப பாக்குறியே இந்த சோனையன் மலுங்கிட்டாப்ள. ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி சோனையன்தான் தெக்குப் பக்கம் முழுசும் கொடிகட்டிப் பறந்தது. அடிச்சுக்க ஆளே இல்லயே. அப்படி ஒரு ஓட்டக்காரன். அட முத்து படத்துல கூட ரஜினி குதிரய அடிச்சு ஓட்டுவாருல. அவருக்குப் பின்னாடியே ஒரு வண்டில நம்ம சோனையன் மெரட்டிக்கிட்டு வருவாப்ளயாம். அந்த சீன எடுத்துப்புட்டானுகளாம்.
எதுக்காம்? தெரியல. ஒருவேள ஹீரோவ மிஞ்சி வேகமா ஓட்டிப்புட்டாரோ என்னவோ? நிஜ ஹீரோலாம் முகம் தெரியாமலே செத்துப் போயிடுறானுங்க மச்சான். அதுதானே நடக்குது இங்க.  
 சோனையன் அவுங்க இனத்துச் சாமியாடியாம். முன்னாடிலாம் முடிய நல்லா வளத்து முடிஞ்சு கட்டிக்கிட்டு கூட்டத்துல நடந்து வருவாப்ள பாரு. சும்மா பட்டயக் கௌப்புவாப்ள. நல்லா இறுகிப்போன ஒடம்பு, காத்தாலை விசிறி மாதிரி இருக்கும் ரெண்டு கையும். செவ்வட்டை மாதிரி தழும்பும் காயமும் ஒடம்ப கிழிச்சுக் கெடக்கும். ஓடியோடி கனத்துப்போன  தொடை. கிட்டத்தட்ட அறுத்துப்போட்ட மரம் மாதிரியிருக்கும். அவ்வளவா யார்ட்டயும் பேசமாட்டாரு. ஆனா களத்துல குதிச்சுட்டார்னு வையி துறுதுறுனுதான் இருப்பாப்ள. எனக்கென்னமோ இப்பலாம் வேகம் கொறஞ்ச மாதிரி தெரியுது.
ரத்தினத்துக்கு சோனையன பத்தி அவ்வளவு பரிச்சயம் இல்ல. தங்கம் சொன்ன பிறகு சோனையன ரசிச்சுப் பாக்கனும்னு தோணிருக்கனும்.
ரெண்டு பேரும் இப்டி பேசிக்கிட்டே பந்தயம் நடக்குற இடத்துக்கு பக்கத்துல வந்துட்டாங்க. அந்த ஒலிபெருக்கி நிமிசத்துக்கு பத்து முறை சோனையன பத்திதான் ஊதிக்கிட்டு இருந்தது.
மச்சான் அந்தா பாரு சோனையன் வர்றாப்ள.
ஆமா மச்சான். உடம்போடு உடம்பாக ஒட்டிய டவுசரையும் பனியனையும் போட்டுக்கொண்டு கையயும் காலையும் ஒதறிக்கொண்டு ஏதோ எக்ஸசைஸ் எடுத்துக்கொண்டு இருந்ததை வழியில் வந்த தங்கம் ரத்தினம் தவிர வேறு யாரும் பாத்திருக்க வாய்ப்பில்லலை.
அண்ணே! நல்லாருக்கீகளா? இன்னக்கி மெரட்டிப்புடுங்கணே! ஒங்களுக்காகத்தான் மங்கலத்துல இருந்து வந்துருக்கோம். ரத்தினம் தன்னை அறியாம கத்திட்டான்.
ம்ம்ம்ம் னு தலைய அசைச்சு கைய ஒசத்திக் காட்டி நின்ன இடத்துலயே ஓடிக்கிட்டு இருந்தத தங்கம் ரொம்ப ரசிச்சுப் பாத்துட்டு போட்டி நடக்குற இடத்த நோக்கி இருவரும் மெதுவாக ஊர்ந்தனர்.
அடுத்ததாக பூஞ்சிட்டுப் பந்தயம் நடக்கவிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் ரோட்டைவிட்டு ஓரமாக நின்று ரசிக்கும்படி விழாக்கமிட்டியார் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏம்பா அந்த மினி பஸ் காரன யாரு உள்ள விட்டது? கமிட்டியாளுக சத்த நிறுத்தி அனுப்புங்கப்பா. பந்தயம் ஆரம்பிக்க போகுது.
பூஞ்சிட்டுப் பந்தயம் பாக்கத்தான் ஊருசனம் அவ்வளவும் கூடி நிக்குது. அதுவும் பக்கோட்டி சோனையன பாக்க ரசிக பட்டாளமே இருக்கு. அதுல பாதி அறுபதுகள தாண்டுன ரசிகர்கள்.
அவ்வளவு நேர்த்தியா மாட அடுச்சு மாட்டுக்கு முன்னாடி ஓடி மாட்ட இழுத்துக்கிட்டே ஜெயிச்ச கதைலாம் சோனையனுக்கு உண்டு.
அந்தா பாருங்கப்பா சோனையன் நிக்குறான். ஆமா ஆமா மஞ்ச சட்ட தானே? னு கூட்டத்துல யாரோ கௌப்பிவிட்டாய்ங்க.
ஆனா சோனையன் வர்றதயே பெரிய ஹீரோவோட என்ட்ரி மாதிரி அனௌன்ஸ் பன்றவன் பிசிறு தட்டிப்புடுவான்.
இதோ நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒண்டிப்புலி ராக்கனோட ரெண்டு செவல காளையும் களத்துல நின்றுகொண்டிருக்கின்றன. அது மாடா இல்ல குதிரைகளா என்று தெரியாதபடி ஜைஜான்டிக்கா நிற்பதை பாருங்கள். இந்தச் செவல காளைகளோட ஓட்டுக்காரன் வந்துவிட்டார். ஆனால் தென்னாட்டுச் சிங்கம் காளைகளின் வேங்கை  பக்கோட்டி சோனையன் இன்னும் வரவில்லை. இதோ வந்துவிட்டார்… என்று கூவு கூவு என்று கூவி எடுத்துவிட்டான் அ்ந்த மைக்செட்காரன்.
கைதட்டல்களும் விசில்களும் சோனையா சோனையா என்ற கூப்பாடுகளும் ஓய்ந்தபாடில்லை..
சரி சரி எல்லாம் ஓரமா நில்லுங்கப்பா பந்தயம் ஆரம்பிக்கப்போகுது.. மைக்செட்
ஏழு வண்டிகள். நேராக ரோட்டில் நிறுத்த முடியாததால் ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகள் நிற்கின்றன. ஒவ்வொரு வண்டியாக மைக்செட்காரன் அனௌன்ஸ் பன்றான்.
முதலாவதாக மேட்டுக்குடி திருநாவுக்கரசு மாடு,
இரண்டாவதாக கருங்காப்பட்டி சங்கரபாண்டித் தேவர் மாடு 
மூன்றாவதாக மேலச்சேரி முருகையா அம்பலம் மாடு
நான்காவதாக கண்டனூர் மாணிக்கஞ் செட்டியார் மாடு
ஐந்தாவதாக ஒண்டிப்புலி ராக்கன் மாடு
ஆறாவதாக மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு
இந்த மாடுகளுக்குப் பின்னாலும் வண்டிகளை ஓட்டுகிறவர்களுக்குப் பின்னாலும் பக்கோட்டிகளுக்குப் பின்னாலும் வெவ்வேறு பின்புலங்கள் இருப்பதெல்லாம் வேறு கதை.
ஏம்ப்பா ஒதுங்குப்பா. காளைகள் எல்லாம் சீறிப் பாஞ்சுக்கிட்டு இருக்கு. கொழந்தைகள குறுக்க வுட்டுறாதீங்க கவனம் கவனம் னு மைக்செட் முன்னாடி போய்க்கொண்டிருக்க.
அரியானூர் விலக்கிலிருந்து கீரணிப்பட்டி வளைவு வரை சென்று கொடியை வாங்கிக்கொண்டு தொடக்க எல்லைக்கு திரும்ப வேண்டும்.

முதலில் வரும் வண்டிக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்படும். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் இருக்கும்.
அதோ விசில் ஊதப்பட்டுவிட்டது. காளைகள் சீறிப்பாய்கின்றன. ரசிகர் பட்டாளம் கூச்சலிடுகின்றனர். போதாக்குறைக்கு மைக்செட்.
ஏழு மாடுகளுக்கு முன்பக்கமாக விழாக்கமிட்டியார் பைக்குகளில் பறக்கின்றனர். பின்புறமாக ரசிகர் பட்டாளம் எப்படியும் இருபத்தஞ்சு முப்பது பைக்குகளில் உறுமிக்கொண்டு செல்கின்றனர்...
ஏய் அந்தா பாரு சோனையன். சோனையா வெரட்டி ஓட்டு வெரட்டி ஓட்டுனு ஒரே இரைச்சல். ஆனால் சோனையன் யாரையும் கண்டுகொள்ளவில்லை. வெற்றிலையைப்  போட்டுத் துப்பிய வாயுடன் ஹேய் ஹேய் னு வண்டிய விட்டு இறங்காம தட்டிக்கிட்டு இருக்கான். மற்ற வண்டிகளோட பக்கோட்டிகள் எல்லாம் வண்டிய விட்டு இறங்கி லீடிங் கொடுக்க ஆரம்பிச்சாட்டானுங்க. ஆனா சோனையன் அசால்ட்டா வண்டிலயே வண்டிக்காரனோடு ஒக்காந்துட்டு இருந்தத எ்ல்லாரும் வெறுப்போடு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க..
யோவ் அவன் ஸ்டைலே அதுதான்யா போகும் போது விட்டுடுவான். வரும் போது பாருனு தங்கம் பொங்கி எழுந்துட்டான்..
எல்லையில் ஐந்தாறு மண்ணெண்ணெய் ட்ரம் நிறுத்தப்பட்டிருக்கும். அந்த ட்ரம்களிடம் மாடுகளை வளைத்துக் கொடியையும் வாங்கிக்கொண்டு பிறகு ஓட்ட வேண்டும். அந்த இடம் தான் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கின்ற இடம். கொடியை வாங்குகின்ற இடத்தில்தான் சோனையன் சாகசங்களைக் காட்டி காளைகளை இறங்கி தட்டுவான்.
ஐந்தாவது இடத்தில் போய்க்கொண்டிருந்த ஒண்டிப்புலி ராக்கனோட மாடு இரண்டாம் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. முதலாவதாக போய்க்கொண்டிருந்த மேட்டுக்குடி திருநாவுக்கரசு மாடு நான்காவது இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. ஆறாவது இடத்தில் போய்க்கொண்டிருந்த  மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு இப்போது முதல் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. மற்ற மாடுகளைப் பற்றி மைக்செட் சொல்லவில்லை. அவைகள் தூரத்தில் வந்து கொண்டிருக்கலாம். அல்லது ரோட்டை விட்டுக் கீழே விழுந்திருக்கலாம். அல்லது பக்கோட்டி மாடுகளின் தொடைகளில் தார்க்குச்சியால் குத்தியதில் ரத்தம் பீறிட்டுக் கொப்பளித்து மயங்கியிருக்கலாம்.
மூன்று மாடுகளும் வாயில் நுரை தள்ளிக்கொண்டு கண்கள் இரண்டும் பிதுங்கியபடி ஓடிக்கொண்டிருக்கின்றன.
இன்னும் இரண்டாவது இடத்திலேயே சோனையன் ஓட்டிக்கொண்டிருப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை. சோனையா வெரசா ஓட்டு ம்ம்ம் இன்னும் வெரசா..
சோனையன் தன் பிடரியில் கால் அடிக்கிற மாதிரி பிசாசுத்தனமாக மாட்டை விரட்டினான்.
ஹேய் ஹேய்… ம்ம்ம்ம்… உச்உச்உச்…
இரண்டில் ஒரு செவலக்காளைக்கு என்ன ஆனதென்று யாராலும் ஊகிக்க முடியல. திடீரென வெள்ளை முழி தெரியும் அளவுக்கு நான்கு கால்களும் பின்னிக்கொள்ள நிதானம் தவறிப் போனது. இன்னொரு மாடும் தன் நிலை மாறிப்போனது. வண்டியும் குடம்சாய்ந்து போக வண்டி ரோட்டைவிட்டுச் சரிந்து மாட்டின் தோல்கள் உராய்ந்து ரத்தம் சொட்ட சொட்ட பெரிய குழிக்குள் நொருங்கி விழுந்தன.மாடுகள் இரண்டும் குத்துயிராகக் கிடக்க வண்டிக்காரனின் இடது கை முறிந்து கால் விரல்கள் துண்டித்துப் போக இழுத்துக் கொண்டு கிடந்தான்..
சோனையன் மட்டும் ரோட்டின் மேலேயே நின்று கொண்டிருக்கிறான்..
அவன் பார்வைகள் துடித்துக்கொண்டிருக்கிற செவலயைவிட்டு மீளவில்லை.
சோனையா மாட்ட தூக்கி ஓட்டு.. ம்ம்ம் ஒன்னால முடியும்னு யாரோ ஒருவன் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தான்..
தங்கமும் ரத்தினமும் உக்காந்திருந்த இடத்துல இந்தச் சம்பவம் நடந்தத அவங்க எதிர்பார்க்கல.
வண்டிய விட்டு இறங்கி ஓட்டியதுல சோனையன் மட்டும் ஓடியபடியே நின்னுட்டான்..
அதோ அந்த மாடு கடைசியாக ஒருமுறை சோனையனைப் பார்த்துக் கொள்கிறது. இன்னொரு மாடும் சோனையனைப் பார்க்க தன் கழுத்தைத் திருப்புகிறது..
சோனையன் எங்கேயும் திரும்பாமல்  அந்த செவலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறான்..
தூரத்தில் மைக்செட் மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ளது. அதற்கு மேல் யாரும் அந்த மைக்செட்டை கேக்க விரும்பவில்லை..
தான் சாகப் போவதையும் மனிதர்கள் வேடிக்கை பார்ப்பதையும் அந்த செவலைகள் விரும்பவில்லை. அதோ செத்துக் கொண்டிருக்கின்றன..



  
எழுத்தாணி  /  at  ஆகஸ்ட் 17, 2016  /  No comments

பக்கோட்டி

“மஞ்சுவிரட்டும் மாட்டுவண்டிப்பந்தயமும் நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இத்தடை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது” என்ற செய்தியறிக்கையைக் கேட்டுவிட்டுப் பலருக்கு பதபதைப்பு ஏற்பட்டது உண்மைதான். அதில் பெரும்பாலானோர் மஞ்சுவிரட்டிற்குத் தடை என்பதை எதிர்த்துப் போராடவும் தொடங்கிவிட்டனர்.
 தங்கவேலு எந்த ஊரில் தட்டுவண்டிப் பந்தயம் நடந்தாலும் நடந்தே போய்ச்சேந்துடுவான். கைக்குத் துணையா அவன் மச்சினன் முருகரத்தினமும் கூடவே திரிவான். ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து குடிக்கிறதும் ஊர்நாயம் பேசுறதும் முக்கியமான இடங்கள்ல முக்கியமான ஆள்மாதிரி காட்டிக்கிறதும் இவனுகளுக்குக் கைவந்த கலை. இவய்ங்க நடந்து போன பிறகு பின்னாடி நின்னு புரணி பேசுற ஆள்தான் நிறைய பேர். நேருக்கு நேராக யாரும் பேசுறதில்ல. பேசுனா அன்னைக்கு முழுசும் இவய்ங்க அலப்பறதான். ஊரக்கூட்டி ரெண்டாக்கிப்புடுவாய்ங்க..
அரண்மனைப்பட்டி மாகாணத்தில் தட்டுவண்டிப்பந்தயம் காலங்காலமாக நடத்தி வருகின்ற கோயில் நிகழ்ச்சி. அதிலும் அரிச்சானூர் பந்தயம் என்றால் சிறுசு பெருசு அத்தனையும் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு காலையிலேயே கெளம்பிவிடும்.
தங்கவேலும் முருகரத்தினமும் அன்னைக்குக் வெள்ளெனக் கௌம்பிட்டானுங்க. ஊர்ப்பய எவனும் “ஏம்ப்பா எங்க கௌம்பிட்டீகனு“ கேக்கல. கேக்க யாரும் இன்னும் வீதிக்கு வரல என்பதுதான் உண்மை.
செங்கமங்கலான நேரம். வாயின் முன்பற்களுக்கு இடையில் பீடியை நறுக்கெனக் கடித்தபடி  பேசிக்கொண்டு வந்தான் ரத்தினம். திடீரென
ஆமா மாப்ள இந்த ஊர் பந்தயத்தப் பத்தி கேள்விப்பட்டுருக்கேன். அப்டி என்ன விசேசம்? இந்தக் கேள்விய கேட்டதும் தங்கம் அப்பதான் ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினான். அதுவரை ரத்தினம் பேசியத கவனிக்காத தங்கத்துக்கு இந்தக் கேள்வி மட்டும் மனசுல ஒரு உற்சாகத்த ஏற்படுத்தியிருக்கணும். இப்படி ஒருத்தன் கேட்டுட்டா போதும். தன்னையும் நம்பி ஒருத்தன் கேக்குறானேங்குற மெதப்புல பொளந்து கட்டிடுவான். கிட்டத்தட்ட ஒரு வாத்தியாரு மாதிரி பேச ஆரம்பிச்சுடுவான். அவ்வளவு வரலாறும் அத்துப்புடி.
   மச்சாஆஅன் கருங்காப்பட்டி சங்கரபாண்டித் தேவர் மாடு, மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு, மேலச்சேரி முருகையா அம்பலம் மாடு, மேட்டுக்குடி திருநாவுக்கரசு மாடு, ஒண்டிப்புலி ராக்கன் மாடு, துறையூர் ரத்தினம் மாடு,  கண்டனூர் மாணிக்கஞ் செட்டியார் மாடுனு பெரிய பெரிய தலக்கட்டுக நேரடியாக் களத்துல குதிக்கிற ஊர்தான் அரிச்சானூர். சாதி, அரசியல், பணம் அத்தனையும் குவிஞ்சுகெடக்கும். அரிச்சானூர்ல மட்டும்   ஒருத்தன் தட்டுவண்டி ஓட்டி ஜெயிச்சுட்டானு வை அவன்தான் அடுத்த ஒன்றியக் கவுன்சிலர். இப்டி ஒன்றியக் கவுன்சிலர வச்சு்த்தான் இந்த ஜில்லாவுல தட்டுவண்டிப் பந்தயத்த நடத்திக்கிட்டு இருக்கானுக.  நீ வேணுனா பாருவேன் இப்ப அரசாங்கம் விட்டுருக்க அறிக்கையப் பாத்து ஊர்ப்பயலுக அவ்வளவு பேரும் பந்தயத்த நிறுத்திடுவாய்ங்க. ஆனா அரண்மனைப்பட்டி நாட்டுக்காரனுங்க மட்டும் மாட்ட அவுத்துக்கிட்டே இருப்பானுங்க.
எத்தனப் போட்டி மாப்ள இவனுக நடத்துவாய்ங்க? பான்பராக்கு எச்சிய துப்பிக்கிட்டே ரத்தினம் கேட்டது தங்கத்துக்கு எரிச்சல உண்டாக்கிடுச்சு. தங்கத்துக்கு பான்பராக்கு மட்டும் புடிக்காது. மத்தது எல்லாம் அத்துப்புடி. மச்சானாச்சே திட்ட முடியாம பேச்ச தொடர்ந்தான் தங்கம்.
 பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடுனு மூனு வகையறாவ போட்டி நடத்துவாய்ங்க. இதுல பூஞ்சிட்டுப் பந்தயம் தான் மச்சான் இங்க படுஞ்சுறுசுறுப்பா நடக்கும்.
ஆமா சோனையன் பந்தயத்துல கலந்துக்குறாப்ளயா?
என்ன மச்சான் கேள்விது? சோனையனுக்காகத்தான் பந்தயம் பாக்கவே போறேன்.
பக்கோட்டினா சோனையன். சோனையன்னா பக்கோட்டி னு சும்மாவா சொல்லித்திரியிறானுங்க.
பூஞ்சிட்டு பந்தயத்தில் சோனையன் பெயர் அடிபடாமல் இருக்காது. பக்கோட்டினா அவந்தாய்யா.. அது ரெண்டும் காலா? இல்ல தண்டவாளம் வீலா? அப்டியொரு ஆள இனிப் பாக்கமுடியுமானு ஊர் முழுக்க பேச்சு. முன்னாடிலாம் யாருடைய மாடுனு விசாரிச்சுட்டுத்தான் பந்தய ரசிகர்கள் ஒக்காந்துருப்பானுங்க. இப்போலாம் சோனையன் எந்த வண்டில ஓடுறான்னு தான் கேள்வி.
சோனையன் என்ன சாதி மச்சான்?
தெரியல மச்சான். ஆனா கண்டிக்கருப்ப கும்புடுரவங்கனு ஊருக்குள்ள பேச்சு. அத விடு. அதுவா இப்ப முக்கியம். நீ இப்ப பாக்குறியே இந்த சோனையன் மலுங்கிட்டாப்ள. ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி சோனையன்தான் தெக்குப் பக்கம் முழுசும் கொடிகட்டிப் பறந்தது. அடிச்சுக்க ஆளே இல்லயே. அப்படி ஒரு ஓட்டக்காரன். அட முத்து படத்துல கூட ரஜினி குதிரய அடிச்சு ஓட்டுவாருல. அவருக்குப் பின்னாடியே ஒரு வண்டில நம்ம சோனையன் மெரட்டிக்கிட்டு வருவாப்ளயாம். அந்த சீன எடுத்துப்புட்டானுகளாம்.
எதுக்காம்? தெரியல. ஒருவேள ஹீரோவ மிஞ்சி வேகமா ஓட்டிப்புட்டாரோ என்னவோ? நிஜ ஹீரோலாம் முகம் தெரியாமலே செத்துப் போயிடுறானுங்க மச்சான். அதுதானே நடக்குது இங்க.  
 சோனையன் அவுங்க இனத்துச் சாமியாடியாம். முன்னாடிலாம் முடிய நல்லா வளத்து முடிஞ்சு கட்டிக்கிட்டு கூட்டத்துல நடந்து வருவாப்ள பாரு. சும்மா பட்டயக் கௌப்புவாப்ள. நல்லா இறுகிப்போன ஒடம்பு, காத்தாலை விசிறி மாதிரி இருக்கும் ரெண்டு கையும். செவ்வட்டை மாதிரி தழும்பும் காயமும் ஒடம்ப கிழிச்சுக் கெடக்கும். ஓடியோடி கனத்துப்போன  தொடை. கிட்டத்தட்ட அறுத்துப்போட்ட மரம் மாதிரியிருக்கும். அவ்வளவா யார்ட்டயும் பேசமாட்டாரு. ஆனா களத்துல குதிச்சுட்டார்னு வையி துறுதுறுனுதான் இருப்பாப்ள. எனக்கென்னமோ இப்பலாம் வேகம் கொறஞ்ச மாதிரி தெரியுது.
ரத்தினத்துக்கு சோனையன பத்தி அவ்வளவு பரிச்சயம் இல்ல. தங்கம் சொன்ன பிறகு சோனையன ரசிச்சுப் பாக்கனும்னு தோணிருக்கனும்.
ரெண்டு பேரும் இப்டி பேசிக்கிட்டே பந்தயம் நடக்குற இடத்துக்கு பக்கத்துல வந்துட்டாங்க. அந்த ஒலிபெருக்கி நிமிசத்துக்கு பத்து முறை சோனையன பத்திதான் ஊதிக்கிட்டு இருந்தது.
மச்சான் அந்தா பாரு சோனையன் வர்றாப்ள.
ஆமா மச்சான். உடம்போடு உடம்பாக ஒட்டிய டவுசரையும் பனியனையும் போட்டுக்கொண்டு கையயும் காலையும் ஒதறிக்கொண்டு ஏதோ எக்ஸசைஸ் எடுத்துக்கொண்டு இருந்ததை வழியில் வந்த தங்கம் ரத்தினம் தவிர வேறு யாரும் பாத்திருக்க வாய்ப்பில்லலை.
அண்ணே! நல்லாருக்கீகளா? இன்னக்கி மெரட்டிப்புடுங்கணே! ஒங்களுக்காகத்தான் மங்கலத்துல இருந்து வந்துருக்கோம். ரத்தினம் தன்னை அறியாம கத்திட்டான்.
ம்ம்ம்ம் னு தலைய அசைச்சு கைய ஒசத்திக் காட்டி நின்ன இடத்துலயே ஓடிக்கிட்டு இருந்தத தங்கம் ரொம்ப ரசிச்சுப் பாத்துட்டு போட்டி நடக்குற இடத்த நோக்கி இருவரும் மெதுவாக ஊர்ந்தனர்.
அடுத்ததாக பூஞ்சிட்டுப் பந்தயம் நடக்கவிருப்பதால் பொதுமக்கள் அனைவரும் ரோட்டைவிட்டு ஓரமாக நின்று ரசிக்கும்படி விழாக்கமிட்டியார் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏம்பா அந்த மினி பஸ் காரன யாரு உள்ள விட்டது? கமிட்டியாளுக சத்த நிறுத்தி அனுப்புங்கப்பா. பந்தயம் ஆரம்பிக்க போகுது.
பூஞ்சிட்டுப் பந்தயம் பாக்கத்தான் ஊருசனம் அவ்வளவும் கூடி நிக்குது. அதுவும் பக்கோட்டி சோனையன பாக்க ரசிக பட்டாளமே இருக்கு. அதுல பாதி அறுபதுகள தாண்டுன ரசிகர்கள்.
அவ்வளவு நேர்த்தியா மாட அடுச்சு மாட்டுக்கு முன்னாடி ஓடி மாட்ட இழுத்துக்கிட்டே ஜெயிச்ச கதைலாம் சோனையனுக்கு உண்டு.
அந்தா பாருங்கப்பா சோனையன் நிக்குறான். ஆமா ஆமா மஞ்ச சட்ட தானே? னு கூட்டத்துல யாரோ கௌப்பிவிட்டாய்ங்க.
ஆனா சோனையன் வர்றதயே பெரிய ஹீரோவோட என்ட்ரி மாதிரி அனௌன்ஸ் பன்றவன் பிசிறு தட்டிப்புடுவான்.
இதோ நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒண்டிப்புலி ராக்கனோட ரெண்டு செவல காளையும் களத்துல நின்றுகொண்டிருக்கின்றன. அது மாடா இல்ல குதிரைகளா என்று தெரியாதபடி ஜைஜான்டிக்கா நிற்பதை பாருங்கள். இந்தச் செவல காளைகளோட ஓட்டுக்காரன் வந்துவிட்டார். ஆனால் தென்னாட்டுச் சிங்கம் காளைகளின் வேங்கை  பக்கோட்டி சோனையன் இன்னும் வரவில்லை. இதோ வந்துவிட்டார்… என்று கூவு கூவு என்று கூவி எடுத்துவிட்டான் அ்ந்த மைக்செட்காரன்.
கைதட்டல்களும் விசில்களும் சோனையா சோனையா என்ற கூப்பாடுகளும் ஓய்ந்தபாடில்லை..
சரி சரி எல்லாம் ஓரமா நில்லுங்கப்பா பந்தயம் ஆரம்பிக்கப்போகுது.. மைக்செட்
ஏழு வண்டிகள். நேராக ரோட்டில் நிறுத்த முடியாததால் ஒன்றன்பின் ஒன்றாக வண்டிகள் நிற்கின்றன. ஒவ்வொரு வண்டியாக மைக்செட்காரன் அனௌன்ஸ் பன்றான்.
முதலாவதாக மேட்டுக்குடி திருநாவுக்கரசு மாடு,
இரண்டாவதாக கருங்காப்பட்டி சங்கரபாண்டித் தேவர் மாடு 
மூன்றாவதாக மேலச்சேரி முருகையா அம்பலம் மாடு
நான்காவதாக கண்டனூர் மாணிக்கஞ் செட்டியார் மாடு
ஐந்தாவதாக ஒண்டிப்புலி ராக்கன் மாடு
ஆறாவதாக மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு
இந்த மாடுகளுக்குப் பின்னாலும் வண்டிகளை ஓட்டுகிறவர்களுக்குப் பின்னாலும் பக்கோட்டிகளுக்குப் பின்னாலும் வெவ்வேறு பின்புலங்கள் இருப்பதெல்லாம் வேறு கதை.
ஏம்ப்பா ஒதுங்குப்பா. காளைகள் எல்லாம் சீறிப் பாஞ்சுக்கிட்டு இருக்கு. கொழந்தைகள குறுக்க வுட்டுறாதீங்க கவனம் கவனம் னு மைக்செட் முன்னாடி போய்க்கொண்டிருக்க.
அரியானூர் விலக்கிலிருந்து கீரணிப்பட்டி வளைவு வரை சென்று கொடியை வாங்கிக்கொண்டு தொடக்க எல்லைக்கு திரும்ப வேண்டும்.

முதலில் வரும் வண்டிக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்படும். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் இருக்கும்.
அதோ விசில் ஊதப்பட்டுவிட்டது. காளைகள் சீறிப்பாய்கின்றன. ரசிகர் பட்டாளம் கூச்சலிடுகின்றனர். போதாக்குறைக்கு மைக்செட்.
ஏழு மாடுகளுக்கு முன்பக்கமாக விழாக்கமிட்டியார் பைக்குகளில் பறக்கின்றனர். பின்புறமாக ரசிகர் பட்டாளம் எப்படியும் இருபத்தஞ்சு முப்பது பைக்குகளில் உறுமிக்கொண்டு செல்கின்றனர்...
ஏய் அந்தா பாரு சோனையன். சோனையா வெரட்டி ஓட்டு வெரட்டி ஓட்டுனு ஒரே இரைச்சல். ஆனால் சோனையன் யாரையும் கண்டுகொள்ளவில்லை. வெற்றிலையைப்  போட்டுத் துப்பிய வாயுடன் ஹேய் ஹேய் னு வண்டிய விட்டு இறங்காம தட்டிக்கிட்டு இருக்கான். மற்ற வண்டிகளோட பக்கோட்டிகள் எல்லாம் வண்டிய விட்டு இறங்கி லீடிங் கொடுக்க ஆரம்பிச்சாட்டானுங்க. ஆனா சோனையன் அசால்ட்டா வண்டிலயே வண்டிக்காரனோடு ஒக்காந்துட்டு இருந்தத எ்ல்லாரும் வெறுப்போடு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க..
யோவ் அவன் ஸ்டைலே அதுதான்யா போகும் போது விட்டுடுவான். வரும் போது பாருனு தங்கம் பொங்கி எழுந்துட்டான்..
எல்லையில் ஐந்தாறு மண்ணெண்ணெய் ட்ரம் நிறுத்தப்பட்டிருக்கும். அந்த ட்ரம்களிடம் மாடுகளை வளைத்துக் கொடியையும் வாங்கிக்கொண்டு பிறகு ஓட்ட வேண்டும். அந்த இடம் தான் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கின்ற இடம். கொடியை வாங்குகின்ற இடத்தில்தான் சோனையன் சாகசங்களைக் காட்டி காளைகளை இறங்கி தட்டுவான்.
ஐந்தாவது இடத்தில் போய்க்கொண்டிருந்த ஒண்டிப்புலி ராக்கனோட மாடு இரண்டாம் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. முதலாவதாக போய்க்கொண்டிருந்த மேட்டுக்குடி திருநாவுக்கரசு மாடு நான்காவது இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. ஆறாவது இடத்தில் போய்க்கொண்டிருந்த  மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு இப்போது முதல் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. மற்ற மாடுகளைப் பற்றி மைக்செட் சொல்லவில்லை. அவைகள் தூரத்தில் வந்து கொண்டிருக்கலாம். அல்லது ரோட்டை விட்டுக் கீழே விழுந்திருக்கலாம். அல்லது பக்கோட்டி மாடுகளின் தொடைகளில் தார்க்குச்சியால் குத்தியதில் ரத்தம் பீறிட்டுக் கொப்பளித்து மயங்கியிருக்கலாம்.
மூன்று மாடுகளும் வாயில் நுரை தள்ளிக்கொண்டு கண்கள் இரண்டும் பிதுங்கியபடி ஓடிக்கொண்டிருக்கின்றன.
இன்னும் இரண்டாவது இடத்திலேயே சோனையன் ஓட்டிக்கொண்டிருப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை. சோனையா வெரசா ஓட்டு ம்ம்ம் இன்னும் வெரசா..
சோனையன் தன் பிடரியில் கால் அடிக்கிற மாதிரி பிசாசுத்தனமாக மாட்டை விரட்டினான்.
ஹேய் ஹேய்… ம்ம்ம்ம்… உச்உச்உச்…
இரண்டில் ஒரு செவலக்காளைக்கு என்ன ஆனதென்று யாராலும் ஊகிக்க முடியல. திடீரென வெள்ளை முழி தெரியும் அளவுக்கு நான்கு கால்களும் பின்னிக்கொள்ள நிதானம் தவறிப் போனது. இன்னொரு மாடும் தன் நிலை மாறிப்போனது. வண்டியும் குடம்சாய்ந்து போக வண்டி ரோட்டைவிட்டுச் சரிந்து மாட்டின் தோல்கள் உராய்ந்து ரத்தம் சொட்ட சொட்ட பெரிய குழிக்குள் நொருங்கி விழுந்தன.மாடுகள் இரண்டும் குத்துயிராகக் கிடக்க வண்டிக்காரனின் இடது கை முறிந்து கால் விரல்கள் துண்டித்துப் போக இழுத்துக் கொண்டு கிடந்தான்..
சோனையன் மட்டும் ரோட்டின் மேலேயே நின்று கொண்டிருக்கிறான்..
அவன் பார்வைகள் துடித்துக்கொண்டிருக்கிற செவலயைவிட்டு மீளவில்லை.
சோனையா மாட்ட தூக்கி ஓட்டு.. ம்ம்ம் ஒன்னால முடியும்னு யாரோ ஒருவன் கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தான்..
தங்கமும் ரத்தினமும் உக்காந்திருந்த இடத்துல இந்தச் சம்பவம் நடந்தத அவங்க எதிர்பார்க்கல.
வண்டிய விட்டு இறங்கி ஓட்டியதுல சோனையன் மட்டும் ஓடியபடியே நின்னுட்டான்..
அதோ அந்த மாடு கடைசியாக ஒருமுறை சோனையனைப் பார்த்துக் கொள்கிறது. இன்னொரு மாடும் சோனையனைப் பார்க்க தன் கழுத்தைத் திருப்புகிறது..
சோனையன் எங்கேயும் திரும்பாமல்  அந்த செவலைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறான்..
தூரத்தில் மைக்செட் மூப்பந்திடல் சுப்புராஜ் மாடு முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ளது. அதற்கு மேல் யாரும் அந்த மைக்செட்டை கேக்க விரும்பவில்லை..
தான் சாகப் போவதையும் மனிதர்கள் வேடிக்கை பார்ப்பதையும் அந்த செவலைகள் விரும்பவில்லை. அதோ செத்துக் கொண்டிருக்கின்றன..



  

Posted in: Read Complete Article»

0 கருத்துகள்:

சனி, 13 ஆகஸ்ட், 2016

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள்

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள்

ஒருநாள் பொழுதில் கபிலரும் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்பொழுது மன்னன் கபிலரின் கையைப் பற்றிக்கொண்டு “புலவரே உமது கை மிகவும் மென்மையாக உள்ளதே” என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதுகேட்ட கபிலருக்குச் சொல்லவா வேண்டும் உதித்துவிட்டது பாடல்.  
புதுக்கவிதை வடிவம்
கணைய மரங்களின்
காலுறிக்கும் வலிமை
முதல் வேலையே
எதிர்ப்போரை உதிர்த்தல்தான்
இப்படிக் கடுங்கோபம் கொண்ட
சிறுகண்ணுடைய யானையை
வேலைப்பாடு பொருந்திய
அங்குசம் கொண்டு
அதன் அருகில் சென்று

மதத்தை அடக்கி வீரத்தைக்
காட்டி நிற்கின்ற கைகள் அது..
பாதாளக் கிணற்றைக்
கவனமாய்க் கடப்பதற்கு
குதிரையின் பிடிவாரை
சுண்டி இழுக்கின்ற கைகள் அது..
நயமிக்க தேரில்
நின்றுகொண்டு எதிரிகளை
அன்பால் முடியாது என்று
அம்பால் வீழ்த்த
வில்லினை இழுத்து விடுகின்ற கைகள் அது..
இத்தனை வேலைகளைச் செய்யும்
உன் கைகள்
பஞ்சுபோல் இருக்க வாய்ப்பில்லை
அதுதான் இறுகிப்போய் உள்ளன..
நாங்கள் அவ்வாறில்லை..
காய்களையும் கறிகளையும் உண்டு
உடல் வருத்தி
வேலை செய்யும் பழக்கமில்லை
உன்னைப் பாடுவதைத் தவிர
வேறு ஒன்றும் அறியோம்..
ஆதலால்தான் எங்கள் கைகள்
மெலிந்தனவாய் உள்ளன..
செய்யுள்
கடுங்கண்ண கொல்களிற்றால்
காப்புடைய எழுமுருக்கிப்
பொன்னியல் புனைதோட்டியான்
முன்பு துரந்து சமம் தாங்கவும்
பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
வலிய வாகுநின் தாள் தோய் தடக்கை
புலவு நாற்றத்து பைந்தடி
பூ நாற்றத்த புகைகொளீஇ ஊன் துவை
கறி சோறுண்டு வருந்து தொழிலல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின் அன்றும்
கார் அணங்காகிய மார்பில் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மைச்
செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே (புறம் .14)
                          திணை – பாடாண் திணை
                          துறை – இயன்மொழித்துறை
உரைவடிவம்
காவலுக்கான கணைய மரத்தை முறித்து கொலைத்தொழிலை விரும்பிச் செய்யும் வலிமை பொருந்திய யானையை அழகுடைய இரும்பால் செய்யப்பட்ட அங்குசம் கொண்டு அடக்குபவன் நீ. பிளந்து கிடந்த கிடங்கு ஒன்றில் ஆழமான நிலையில் நீர் நிரம்பிக் கிடக்க அதனுள் செல்லாமல் தாண்டிக் கடத்தற் பொருட்டு குதிரையின் கயிற்றை இழுத்துப் பிடிக்கும் கைகள் உன் கைகள் அம்பறாத்தூணி பொருந்திய தேரினுள் வடு பொருந்தும்படி வில்லினை ஏவுதற்குரிய வலிய கைகள் பரிசு பெறுபவர்களுக்கு ஆபரணங்களை வாரி வழங்குதற்குரிய கைகள் ஆதலால் நின் கைகள் வலியனவாக உள்ளன. புலால் நாற்றமுடைய புதிய ஊனைச் சமைத்து உண்ணுதலையும் உடலினை வருத்தி வேறு தொழில் ஏதும் செய்யாததாலும் பாடுதல் தொழிலையுடைய எமது கைகள் மென்மையாக உள்ளன.
அருஞ்சொற்பொருள்

எழு – கணைய மரம், சமம் – வேண்டும் அளவு, குசை – சாட்டி, பிடிவார், புறம் – முதுகு, சாபம் – வில், செவ்விததடி-புதிய ஊன் கறி
எழுத்தாணி  /  at  ஆகஸ்ட் 13, 2016  /  3 comments

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள்

ஒருநாள் பொழுதில் கபிலரும் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்பொழுது மன்னன் கபிலரின் கையைப் பற்றிக்கொண்டு “புலவரே உமது கை மிகவும் மென்மையாக உள்ளதே” என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதுகேட்ட கபிலருக்குச் சொல்லவா வேண்டும் உதித்துவிட்டது பாடல்.  
புதுக்கவிதை வடிவம்
கணைய மரங்களின்
காலுறிக்கும் வலிமை
முதல் வேலையே
எதிர்ப்போரை உதிர்த்தல்தான்
இப்படிக் கடுங்கோபம் கொண்ட
சிறுகண்ணுடைய யானையை
வேலைப்பாடு பொருந்திய
அங்குசம் கொண்டு
அதன் அருகில் சென்று

மதத்தை அடக்கி வீரத்தைக்
காட்டி நிற்கின்ற கைகள் அது..
பாதாளக் கிணற்றைக்
கவனமாய்க் கடப்பதற்கு
குதிரையின் பிடிவாரை
சுண்டி இழுக்கின்ற கைகள் அது..
நயமிக்க தேரில்
நின்றுகொண்டு எதிரிகளை
அன்பால் முடியாது என்று
அம்பால் வீழ்த்த
வில்லினை இழுத்து விடுகின்ற கைகள் அது..
இத்தனை வேலைகளைச் செய்யும்
உன் கைகள்
பஞ்சுபோல் இருக்க வாய்ப்பில்லை
அதுதான் இறுகிப்போய் உள்ளன..
நாங்கள் அவ்வாறில்லை..
காய்களையும் கறிகளையும் உண்டு
உடல் வருத்தி
வேலை செய்யும் பழக்கமில்லை
உன்னைப் பாடுவதைத் தவிர
வேறு ஒன்றும் அறியோம்..
ஆதலால்தான் எங்கள் கைகள்
மெலிந்தனவாய் உள்ளன..
செய்யுள்
கடுங்கண்ண கொல்களிற்றால்
காப்புடைய எழுமுருக்கிப்
பொன்னியல் புனைதோட்டியான்
முன்பு துரந்து சமம் தாங்கவும்
பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
வலிய வாகுநின் தாள் தோய் தடக்கை
புலவு நாற்றத்து பைந்தடி
பூ நாற்றத்த புகைகொளீஇ ஊன் துவை
கறி சோறுண்டு வருந்து தொழிலல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின் அன்றும்
கார் அணங்காகிய மார்பில் பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மைச்
செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே (புறம் .14)
                          திணை – பாடாண் திணை
                          துறை – இயன்மொழித்துறை
உரைவடிவம்
காவலுக்கான கணைய மரத்தை முறித்து கொலைத்தொழிலை விரும்பிச் செய்யும் வலிமை பொருந்திய யானையை அழகுடைய இரும்பால் செய்யப்பட்ட அங்குசம் கொண்டு அடக்குபவன் நீ. பிளந்து கிடந்த கிடங்கு ஒன்றில் ஆழமான நிலையில் நீர் நிரம்பிக் கிடக்க அதனுள் செல்லாமல் தாண்டிக் கடத்தற் பொருட்டு குதிரையின் கயிற்றை இழுத்துப் பிடிக்கும் கைகள் உன் கைகள் அம்பறாத்தூணி பொருந்திய தேரினுள் வடு பொருந்தும்படி வில்லினை ஏவுதற்குரிய வலிய கைகள் பரிசு பெறுபவர்களுக்கு ஆபரணங்களை வாரி வழங்குதற்குரிய கைகள் ஆதலால் நின் கைகள் வலியனவாக உள்ளன. புலால் நாற்றமுடைய புதிய ஊனைச் சமைத்து உண்ணுதலையும் உடலினை வருத்தி வேறு தொழில் ஏதும் செய்யாததாலும் பாடுதல் தொழிலையுடைய எமது கைகள் மென்மையாக உள்ளன.
அருஞ்சொற்பொருள்

எழு – கணைய மரம், சமம் – வேண்டும் அளவு, குசை – சாட்டி, பிடிவார், புறம் – முதுகு, சாபம் – வில், செவ்விததடி-புதிய ஊன் கறி

Posted in: Read Complete Article»

3 கருத்துகள்:

புதன், 3 ஆகஸ்ட், 2016

பழைய பேருந்து நிலையம்

           பழைய பேருந்து நிலையம்


பலாப்பலோய்.. பலாப்பலோய்.. பாக்கெட்டு பத்துருவா.. தேன்சொலை தேன்சொலை இப்படி அந்த வியாபாரி கத்துனது பல பேருக்கு எரிச்சல உண்டாக்கி இருக்கனும். யார்ரா இவன் காதுக்குள்ள வந்து கத்திக்கிட்டு? னு தூக்கத்துல திட்டிக்கிட்டே மறுபடியும் ஒரு பெரியவர் தூங்குனத என்னைத் தவிர அநேகம் யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
 காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வர அதிகபட்சம் இரண்டரை மணிநேரம் என்பது பழக்கப்பட்ட பயணிகளுக்குத் தெரியும். என்னமோ தெரியல அந்த டிரைவர் இழு இழுனு 3 மணி நேரத்திற்கு இழுத்துட்டார்..
திருச்சிக்கு வருவதென்றால் பெரும்பாலும் சென்னை போகிற பேருந்து நின்றால் நடத்துனர் அனுமதியோடு ஏறிவிடுவேன். விழாக் காலங்களில் ஏறுவது சிரமம். அப்பொழுது ஒன் டு ஒன் பேருந்து நின்றால் ஏறுவது வழக்கம். இந்த மாதிரியான பழக்கத்திற்குக் காரணம் காரைக்குடிதிருச்சி வழிப்பாதையில் ஏராளமான நிறுத்தங்களும், கூட்ட நெரிசலும் தான். எது எப்படியோ சாதாரண பேருந்திலோ எக்ஸ்பிரஸ் என்று பெயரளவில் போட்டுக் கொண்டு ஊரை ஏமா(சு)ற்றும்  பேருந்துகளிலோ பெரும்பாலும் ஏறுவதைத் தவிர்த்தே வந்துள்ளேன் அண்மைக் காலமாக...
இப்படி எத்தனை நாள் அமையும்? நாம் நெனச்ச மாதிரி நடக்காத போது தான் வாழ்க்கையின் மீதான வெறுப்புணர்வு பீறிட்டுக் கொப்பளிக்கிறது. இதுவே தொடர்ந்து நடக்கும் போது முழுமையாக நம்மை வெறுக்க நேரிடுகிறது..
அப்படி வெறுத்த நாளில் தான் இப்பொழுது பயணம் செய்து கொண்டிருக்கிறேன்..
அந்தப் பலாப்பழத்தை யாரும் வாங்கியதாக தெரியவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் யாரும் விழித்துக் கவனித்ததாகக் கூடத் தெரியவில்லை.
வெள்றி பிஞ்சு.. வெள்றி பிஞ்சு.. வெள்றி பிஞ்சோய்.. அண்ணே வேணுமா..? யாரோ நடுத்தர பெண்மணி பேருந்தின் சன்னல் வழியாகக் கூவிக்கொண்டிருந்தாள். பேருந்துக்குள் தலைப்பாகை கட்டிக்கொண்டிருந்த ஒரு பெரியவர் மட்டும் வாங்கிக் கொண்டார். மொளகாப்பொடி போட்டுத்தாம்மா..? காரமா சாப்பிட்டுப் பழக்கம் போல.. பேருந்து புறப்பட்ட இடம் செட்டிநாடு அல்லவா?
இஞ்சிமரப்பா இஞ்சிமரப்பா
எவ்வளவு நல்ல பதார்த்தம்? யாரும் சீண்டவில்லை
வாய்ப்பாடு அட்டை, ரேசன் கார்டு அட்டை செல்போன் கவர், ஸ்போக்கன் இங்கிலீஸ்னு மெது மெதுவா சொல்லிக்கொண்டு முதியவர்களையும் சிறுசுகளையும் குறிவைத்து விற்பனையைத் தொடங்கினார். இந்தப் பெரியவரை திருச்சிக்கு வரத் தொடங்கிய காலக்கட்டங்களில் இருந்து பார்த்து வர்றேன்.. அதே தொழில்தான். பொருள்களும் அதே தான். கூடுதலாக மூணு பிரஸ் பத்து ரூவா எனும் வாசகத்தை மட்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஏம்ப்பா தம்பி எவ்வளோ நேரம் பஸ்சு நிக்கும்..?
தெரியலண்னே.. முன்னாடி நிக்கிற ரெண்டு பஸ்சும் எடுத்ததும் இத எடுப்பாங்கனு நெனக்கிறேன்..
சரிப்பா அதுக்குள்ள வந்துடுவேன். சத்த எடத்த பாத்துக்குறியா? ஒண்ணுக்கடுச்சுட்டு வந்துடுறேன் னு என்னோட பதிலை எதிர்பார்க்காம கௌம்பிப் போய்ட்டாரு.
லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்.. பேருந்தில் பயணிக்கிறவர்களின் அன்பான கவனத்திற்கு..
ஒரு நிமிசம் கவனிங்க சார்.. இப்ப பேருந்துல போகும் போதோ வீட்டுல இருக்கும் போதோ தலைவலி நம்மள பிச்சு எடுத்துடும். அதுலயும் பாருங்க ஒன்சைடு, டபுள்சைடு தலைவலிலாம் வரும். இனிமே அந்த கவலை வேணாம். பாருங்க சார் பாருங்க பெங்களுர் பசகுளோடா காட்டுல இருந்து சுத்தமான தானிய வகைகள்ல இருந்து தயார் பண்ண நம்ம தைலத்த இந்த சுத்தமான பஞ்சுல கொஞ்சமா நனச்சுக்கிட்டு ரெண்டு பொட்டுலயும் மெல்லமா அழுத்திக் கொடுத்தீங்கனா அஞ்சு நிமிசத்துல உங்க தலைவலி காணாமப் போயிடும். எல்லா மருந்து கடைகளிலும் கெடைக்கும். வெளில வாங்குனா இருபது ரூபா. ஆனா கம்பெனி வெளம்பரத்துக்காக வெறும் பத்தெ ரூவாய்க்கு  தர்றோம்..
வேணுமா சார்..? வேணுமா சார்..?
முழங்கால் வலி, ஜலதோசம், வாய்ப்புண், வயித்தவலி, வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி எல்லாத்துக்கும் இத தேய்க்கலாம் அஞ்சு நிமிசத்துல சரியாகலனா என்னனு கேளுங்க ஸ்டாக் கொஞ்சம் தான் சார் இருக்கு.
எல்லா நோயையும் சொன்னதும் ஒன்னு ரெண்டு னு ஆரம்பிச்சு நெருக்கி பத்துப் பேருக்கிட்ட வித்து 100 ரூபா சம்பாரிச்சுட்டான்..
அப்படியே பின்வழியா போயிட்டான் தலைவலி..
டம்முனு கதவ சாத்தி சீட்டுல உக்காந்துட்டாரு டிரைவர். டிர்ர்.. டிர்ர்டிர்ர். னு உருமிக்கொண்டு நகராமல் நின்று கொண்டிருந்த பேருந்து இப்போ நகருமா? அப்போ நகருமானு கவனிச்சுக்கிட்டே இருந்தேன். மெல்ல நகரத் தொடங்கியது ஆனால் நகரவில்லை. ஆமாம் எதிரே நின்ற பேருந்து தான் நகர்ந்தது. ஆனால் எங்க பேருந்து நகர்ந்த மாதிரியே இருந்தது.
ஆமா பாத்ரூம் போனவர காணோமே
ஸ்ஸ்ஸப்பா.. வெயிலு கொளுத்துதுப்பா னு கையில ரெண்டு சோளக்கருதோட வந்தாரு. தம்பி ஒன்னு எடுத்துக்கோங்க..
இல்லங்க பரவால. வேணாம்.
அதுக்கு மேல அவரு கட்டாயப்படுத்தல. வாங்கிடுவேனோனு பயந்திருக்கலாம். பிடிச்சு வாங்கிருக்காரு போல..
இதற்குமேல் என் கவனம் ஒரே இடத்தில் குவிந்து போயிருந்ததை மிக தாமதமாகத்தான் உணர்ந்தேன்.
அந்தக் குழந்தைகளின் சேட்டைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். அதில் இந்தப் பெண் குழந்தை என்னுடன் சைகை மொழியில் போட்டி போட்டுக் கொண்டிருந்தாள். அவளின் மழலை செய்கைகள் என்னை ஒரு கரிசன கர்த்தாவாக மாற்றிக் கொண்டிருந்தனஇதோ அந்த மழலையின் உலகத்திற்குள் மெல்ல மிக மெல்ல நுழைந்து கொண்டிருக்கிறேன்..
வளைந்த புருவத்தைக் கண்மையால் அழகு தீட்டியிருந்தாள். தன் அண்ணனோடு அவள் அடித்த லூட்டிகளை ரசித்த போது அவன் அண்ணனும் என்னுடன் ஐக்கியமாகிவிட்டான்.
இப்போது இரண்டு குட்டிகளும் என்னைப் பார்த்துக் கொண்டே எனக்காக ஏதேதோ விளையாட்டுகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தனர்.
அவர்களின் தீவிரமான ரசிகராக அந்தப் பேருந்தில் நான் மாறிப் போயிருந்தேன் அல்லது மாறிக் கொண்டிருந்தேன்.
எத்தனையோ திண்பண்டங்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. குட்டிகள் இரண்டும் எவற்றையும் கண்டு கொள்ளவில்லை. சீட்டோஸ் சில்ரன்ஸ் அல்லவா?
மூன்றிருக்கை கம்பியின் வழியாகக் குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள் குட்டி தேவதை. நானும் முடிந்தவரை ஹாய் சொல்லிக் கொண்டேயிருந்தேன். இடையிடையே அவள் அம்மாவையும் கவனித்துக் கொண்டதும் தெரிந்தது.
எனக்காகவே அவர்களின் அசைவுகளும் விளையாட்டுகளும் இருந்தது போல் நினைப்பு. ஏன் எனக்காக அவர்கள் இத்தனையையும் செய்து காட்ட வேண்டும்? வேடிக்கைகாரர்களாக அவர்கள் ஏன் மாற வேண்டும்? எந்த மொழியும் இல்லாமல் எப்படி இந்த பார்வைமொழி எங்களுக்குள் வெற்றி பெற்றது?
குழந்தைகள் இந்த உலகின் ஆகச் சிறந்த கலைஞர்கள். நாம் கண்டுகொள்ளாதவரை அவர்கள் எதையும் நமக்கு நிகழ்த்திக் காட்டுவதில்லை. ஆனால் நிகழ்த்திக்காட்ட அவர்களிடம் ஏராளம் உள்ளன. நாம் பெரியவர்களாக இருக்கும்வரை அத்தனை நிகழ்வுகளும் நமக்கு நிகழ்த்திக் காட்டப்படுவதில்லை.
அந்தக் குழந்தைகளின் அம்மா ஏன் பின்னாடியே திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் என்பதை ஊகிக்க முடியவில்லை..
ஒருவேளை என்னைச் சந்தேகப்படுகிறார்களோ? அல்லது என் குழந்தைகளை தொந்தரவு செய்யாதீர்கள் என்கிற பார்வையோ அது? ஆனால் பார்வை என்னைத் தாண்டி செல்கிறதே..
ஒன்றும் புரியவில்லை..
மீண்டும் குழந்தைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டேன்..
பேருந்து கௌம்பிடுச்சு. மெல்ல.. மெல்ல.. சிரமப்பட்டு ஸ்டேரிங்கை டிரைவர் வளைத்துக் கொண்டிருந்தது மட்டும் கண்ணுக்கு லேசாக தெரிந்தது..
சார் கொஞ்சம் நிறுத்துங்க. என் வீட்டுக்காரர் இன்னும் வரல. கன்டக்டர்  நிறுத்துங்க அவரு வரல.
எங்கமா போனாரு?
பாத்ரூமுதான்..
விசில் சத்தம் இல்லாமலே டிரைவர் நிப்பாட்டிட்டாரு
எங்கமா காணோம்.? இவ்வளவு நேரம் நின்னுச்சுல என்னதான் பண்ணுனீங்க?
ஐயோ காணோமே.. எங்க போய்த் தொலஞ்சாருனு தெரியலயே..
குழந்தைகள் முகம் மாறத் தொடங்கியது. சத்தம் போட்டுக் கொண்டிருப்பது குழந்தைகளின் அம்மாதான்..
போன் பண்ணுங்கம்மா..
எனக்கிட்ட கொடுத்துட்டுப் போயிட்டாரே..
கிழிஞ்சது..
ஏம்மா டைம் ஆகுதுமா. ஏதாவது பண்ணுங்க.
சரி எறங்குடி. டேய் எறங்குடா. அந்தப் பைய எடுத்துக்க.
ரெண்டு குழந்தைகளும்  திகைத்துப் போய் நின்றார்கள். அவர்களால் நம்ப முடியவில்லைஅவர்களின் அத்தனை சந்தோசங்களும் ஒரு நொடியில் உடைக்கப்பட்டது.
ஏம்மா எறங்க சொல்லுற? உங்க அப்பா வரவேணாமா? எறங்கு.
இரண்டு பேரும் என்னைக் கவனிக்காமல் அம்மாவின் பதற்றத்தில் அவசர அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தனர்.
குழந்தைகள் வருத்தப்படுவதில் இவ்வளவு ஓலம் இருக்கிறதா..? அவர்களின் அப்பா வந்துவிடக் கூடாதா? அந்த இரண்டு குழந்தைகளும் மீண்டும் வந்து அதே சந்தோசத்துடன் எனக்கு அருகில் அமர வேணடும் என்று யாரையோ நினைத்துக் கொண்டேன்
இரண்டு குழந்தைகளும் இறங்குவதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பையன் தான் ரொம்பவும் வேதனை அடைந்திருக்கிறான் போல. பேருந்து நகர்ந்து கொண்டிருந்ததையே பார்த்துக் கொண்டிருந்த ஏக்கமான பார்வை என்னைக் குடைந்துவிட்டது.
பேருந்தின் பின் கண்ணாடி வழியாக பார்த்தபோது
அவர்களின் அப்பா வந்துவிட்டிருந்தார். ஆனால் பேருந்து மிக தூரத்தில் வந்துவிட்டது. நிறுத்திவிடலாமா என்ற எண்ணம் பலிக்கவில்லை. வேகம் காட்டத் தொடங்கியது பேருந்து.
என்ன ஆச்சு எனக்கு? மனதில் ஏதோ ஒரு பிணைச்சல்.. திருச்சி சேரும் வரை குழந்தைகளின் அரட்டைகளைவிட திடீரெனக் கலைக்கப்பட்ட அவர்களின் சந்தோசமற்ற முகம் உறுத்திக்கொண்டே இருந்தது. அப்பாக்கள் மீது கோபம் தீர்ந்தபாடில்லை..
புதுக்கோட்டை பேருந்து நிலையம் வரும் பொழுதெல்லாம் அந்த இரண்டு சிறுவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை பேருந்தை நிறுத்திக் காட்டுவேன் என்கிற தைரியத்துடன்..

எல்லாரும் அதே பொருள்களை அப்படியே விற்றுக் கொண்டிருக்கிறாரக்ள். ரெண்டு இடத்தையும் தாண்டி இப்போ முதலில் நிற்கிறது பேருந்து. இன்னும் இரண்டு நிமிசத்தில் கிளம்பிவிடுமாம்
குழந்தைகள் குழந்தைகள் என்கிறது மனது…
எழுத்தாணி  /  at  ஆகஸ்ட் 03, 2016  /  3 comments

           பழைய பேருந்து நிலையம்


பலாப்பலோய்.. பலாப்பலோய்.. பாக்கெட்டு பத்துருவா.. தேன்சொலை தேன்சொலை இப்படி அந்த வியாபாரி கத்துனது பல பேருக்கு எரிச்சல உண்டாக்கி இருக்கனும். யார்ரா இவன் காதுக்குள்ள வந்து கத்திக்கிட்டு? னு தூக்கத்துல திட்டிக்கிட்டே மறுபடியும் ஒரு பெரியவர் தூங்குனத என்னைத் தவிர அநேகம் யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.
 காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வர அதிகபட்சம் இரண்டரை மணிநேரம் என்பது பழக்கப்பட்ட பயணிகளுக்குத் தெரியும். என்னமோ தெரியல அந்த டிரைவர் இழு இழுனு 3 மணி நேரத்திற்கு இழுத்துட்டார்..
திருச்சிக்கு வருவதென்றால் பெரும்பாலும் சென்னை போகிற பேருந்து நின்றால் நடத்துனர் அனுமதியோடு ஏறிவிடுவேன். விழாக் காலங்களில் ஏறுவது சிரமம். அப்பொழுது ஒன் டு ஒன் பேருந்து நின்றால் ஏறுவது வழக்கம். இந்த மாதிரியான பழக்கத்திற்குக் காரணம் காரைக்குடிதிருச்சி வழிப்பாதையில் ஏராளமான நிறுத்தங்களும், கூட்ட நெரிசலும் தான். எது எப்படியோ சாதாரண பேருந்திலோ எக்ஸ்பிரஸ் என்று பெயரளவில் போட்டுக் கொண்டு ஊரை ஏமா(சு)ற்றும்  பேருந்துகளிலோ பெரும்பாலும் ஏறுவதைத் தவிர்த்தே வந்துள்ளேன் அண்மைக் காலமாக...
இப்படி எத்தனை நாள் அமையும்? நாம் நெனச்ச மாதிரி நடக்காத போது தான் வாழ்க்கையின் மீதான வெறுப்புணர்வு பீறிட்டுக் கொப்பளிக்கிறது. இதுவே தொடர்ந்து நடக்கும் போது முழுமையாக நம்மை வெறுக்க நேரிடுகிறது..
அப்படி வெறுத்த நாளில் தான் இப்பொழுது பயணம் செய்து கொண்டிருக்கிறேன்..
அந்தப் பலாப்பழத்தை யாரும் வாங்கியதாக தெரியவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமானால் யாரும் விழித்துக் கவனித்ததாகக் கூடத் தெரியவில்லை.
வெள்றி பிஞ்சு.. வெள்றி பிஞ்சு.. வெள்றி பிஞ்சோய்.. அண்ணே வேணுமா..? யாரோ நடுத்தர பெண்மணி பேருந்தின் சன்னல் வழியாகக் கூவிக்கொண்டிருந்தாள். பேருந்துக்குள் தலைப்பாகை கட்டிக்கொண்டிருந்த ஒரு பெரியவர் மட்டும் வாங்கிக் கொண்டார். மொளகாப்பொடி போட்டுத்தாம்மா..? காரமா சாப்பிட்டுப் பழக்கம் போல.. பேருந்து புறப்பட்ட இடம் செட்டிநாடு அல்லவா?
இஞ்சிமரப்பா இஞ்சிமரப்பா
எவ்வளவு நல்ல பதார்த்தம்? யாரும் சீண்டவில்லை
வாய்ப்பாடு அட்டை, ரேசன் கார்டு அட்டை செல்போன் கவர், ஸ்போக்கன் இங்கிலீஸ்னு மெது மெதுவா சொல்லிக்கொண்டு முதியவர்களையும் சிறுசுகளையும் குறிவைத்து விற்பனையைத் தொடங்கினார். இந்தப் பெரியவரை திருச்சிக்கு வரத் தொடங்கிய காலக்கட்டங்களில் இருந்து பார்த்து வர்றேன்.. அதே தொழில்தான். பொருள்களும் அதே தான். கூடுதலாக மூணு பிரஸ் பத்து ரூவா எனும் வாசகத்தை மட்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஏம்ப்பா தம்பி எவ்வளோ நேரம் பஸ்சு நிக்கும்..?
தெரியலண்னே.. முன்னாடி நிக்கிற ரெண்டு பஸ்சும் எடுத்ததும் இத எடுப்பாங்கனு நெனக்கிறேன்..
சரிப்பா அதுக்குள்ள வந்துடுவேன். சத்த எடத்த பாத்துக்குறியா? ஒண்ணுக்கடுச்சுட்டு வந்துடுறேன் னு என்னோட பதிலை எதிர்பார்க்காம கௌம்பிப் போய்ட்டாரு.
லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்.. பேருந்தில் பயணிக்கிறவர்களின் அன்பான கவனத்திற்கு..
ஒரு நிமிசம் கவனிங்க சார்.. இப்ப பேருந்துல போகும் போதோ வீட்டுல இருக்கும் போதோ தலைவலி நம்மள பிச்சு எடுத்துடும். அதுலயும் பாருங்க ஒன்சைடு, டபுள்சைடு தலைவலிலாம் வரும். இனிமே அந்த கவலை வேணாம். பாருங்க சார் பாருங்க பெங்களுர் பசகுளோடா காட்டுல இருந்து சுத்தமான தானிய வகைகள்ல இருந்து தயார் பண்ண நம்ம தைலத்த இந்த சுத்தமான பஞ்சுல கொஞ்சமா நனச்சுக்கிட்டு ரெண்டு பொட்டுலயும் மெல்லமா அழுத்திக் கொடுத்தீங்கனா அஞ்சு நிமிசத்துல உங்க தலைவலி காணாமப் போயிடும். எல்லா மருந்து கடைகளிலும் கெடைக்கும். வெளில வாங்குனா இருபது ரூபா. ஆனா கம்பெனி வெளம்பரத்துக்காக வெறும் பத்தெ ரூவாய்க்கு  தர்றோம்..
வேணுமா சார்..? வேணுமா சார்..?
முழங்கால் வலி, ஜலதோசம், வாய்ப்புண், வயித்தவலி, வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி எல்லாத்துக்கும் இத தேய்க்கலாம் அஞ்சு நிமிசத்துல சரியாகலனா என்னனு கேளுங்க ஸ்டாக் கொஞ்சம் தான் சார் இருக்கு.
எல்லா நோயையும் சொன்னதும் ஒன்னு ரெண்டு னு ஆரம்பிச்சு நெருக்கி பத்துப் பேருக்கிட்ட வித்து 100 ரூபா சம்பாரிச்சுட்டான்..
அப்படியே பின்வழியா போயிட்டான் தலைவலி..
டம்முனு கதவ சாத்தி சீட்டுல உக்காந்துட்டாரு டிரைவர். டிர்ர்.. டிர்ர்டிர்ர். னு உருமிக்கொண்டு நகராமல் நின்று கொண்டிருந்த பேருந்து இப்போ நகருமா? அப்போ நகருமானு கவனிச்சுக்கிட்டே இருந்தேன். மெல்ல நகரத் தொடங்கியது ஆனால் நகரவில்லை. ஆமாம் எதிரே நின்ற பேருந்து தான் நகர்ந்தது. ஆனால் எங்க பேருந்து நகர்ந்த மாதிரியே இருந்தது.
ஆமா பாத்ரூம் போனவர காணோமே
ஸ்ஸ்ஸப்பா.. வெயிலு கொளுத்துதுப்பா னு கையில ரெண்டு சோளக்கருதோட வந்தாரு. தம்பி ஒன்னு எடுத்துக்கோங்க..
இல்லங்க பரவால. வேணாம்.
அதுக்கு மேல அவரு கட்டாயப்படுத்தல. வாங்கிடுவேனோனு பயந்திருக்கலாம். பிடிச்சு வாங்கிருக்காரு போல..
இதற்குமேல் என் கவனம் ஒரே இடத்தில் குவிந்து போயிருந்ததை மிக தாமதமாகத்தான் உணர்ந்தேன்.
அந்தக் குழந்தைகளின் சேட்டைகளை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். அதில் இந்தப் பெண் குழந்தை என்னுடன் சைகை மொழியில் போட்டி போட்டுக் கொண்டிருந்தாள். அவளின் மழலை செய்கைகள் என்னை ஒரு கரிசன கர்த்தாவாக மாற்றிக் கொண்டிருந்தனஇதோ அந்த மழலையின் உலகத்திற்குள் மெல்ல மிக மெல்ல நுழைந்து கொண்டிருக்கிறேன்..
வளைந்த புருவத்தைக் கண்மையால் அழகு தீட்டியிருந்தாள். தன் அண்ணனோடு அவள் அடித்த லூட்டிகளை ரசித்த போது அவன் அண்ணனும் என்னுடன் ஐக்கியமாகிவிட்டான்.
இப்போது இரண்டு குட்டிகளும் என்னைப் பார்த்துக் கொண்டே எனக்காக ஏதேதோ விளையாட்டுகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தனர்.
அவர்களின் தீவிரமான ரசிகராக அந்தப் பேருந்தில் நான் மாறிப் போயிருந்தேன் அல்லது மாறிக் கொண்டிருந்தேன்.
எத்தனையோ திண்பண்டங்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. குட்டிகள் இரண்டும் எவற்றையும் கண்டு கொள்ளவில்லை. சீட்டோஸ் சில்ரன்ஸ் அல்லவா?
மூன்றிருக்கை கம்பியின் வழியாகக் குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள் குட்டி தேவதை. நானும் முடிந்தவரை ஹாய் சொல்லிக் கொண்டேயிருந்தேன். இடையிடையே அவள் அம்மாவையும் கவனித்துக் கொண்டதும் தெரிந்தது.
எனக்காகவே அவர்களின் அசைவுகளும் விளையாட்டுகளும் இருந்தது போல் நினைப்பு. ஏன் எனக்காக அவர்கள் இத்தனையையும் செய்து காட்ட வேண்டும்? வேடிக்கைகாரர்களாக அவர்கள் ஏன் மாற வேண்டும்? எந்த மொழியும் இல்லாமல் எப்படி இந்த பார்வைமொழி எங்களுக்குள் வெற்றி பெற்றது?
குழந்தைகள் இந்த உலகின் ஆகச் சிறந்த கலைஞர்கள். நாம் கண்டுகொள்ளாதவரை அவர்கள் எதையும் நமக்கு நிகழ்த்திக் காட்டுவதில்லை. ஆனால் நிகழ்த்திக்காட்ட அவர்களிடம் ஏராளம் உள்ளன. நாம் பெரியவர்களாக இருக்கும்வரை அத்தனை நிகழ்வுகளும் நமக்கு நிகழ்த்திக் காட்டப்படுவதில்லை.
அந்தக் குழந்தைகளின் அம்மா ஏன் பின்னாடியே திரும்பிப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் என்பதை ஊகிக்க முடியவில்லை..
ஒருவேளை என்னைச் சந்தேகப்படுகிறார்களோ? அல்லது என் குழந்தைகளை தொந்தரவு செய்யாதீர்கள் என்கிற பார்வையோ அது? ஆனால் பார்வை என்னைத் தாண்டி செல்கிறதே..
ஒன்றும் புரியவில்லை..
மீண்டும் குழந்தைகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டேன்..
பேருந்து கௌம்பிடுச்சு. மெல்ல.. மெல்ல.. சிரமப்பட்டு ஸ்டேரிங்கை டிரைவர் வளைத்துக் கொண்டிருந்தது மட்டும் கண்ணுக்கு லேசாக தெரிந்தது..
சார் கொஞ்சம் நிறுத்துங்க. என் வீட்டுக்காரர் இன்னும் வரல. கன்டக்டர்  நிறுத்துங்க அவரு வரல.
எங்கமா போனாரு?
பாத்ரூமுதான்..
விசில் சத்தம் இல்லாமலே டிரைவர் நிப்பாட்டிட்டாரு
எங்கமா காணோம்.? இவ்வளவு நேரம் நின்னுச்சுல என்னதான் பண்ணுனீங்க?
ஐயோ காணோமே.. எங்க போய்த் தொலஞ்சாருனு தெரியலயே..
குழந்தைகள் முகம் மாறத் தொடங்கியது. சத்தம் போட்டுக் கொண்டிருப்பது குழந்தைகளின் அம்மாதான்..
போன் பண்ணுங்கம்மா..
எனக்கிட்ட கொடுத்துட்டுப் போயிட்டாரே..
கிழிஞ்சது..
ஏம்மா டைம் ஆகுதுமா. ஏதாவது பண்ணுங்க.
சரி எறங்குடி. டேய் எறங்குடா. அந்தப் பைய எடுத்துக்க.
ரெண்டு குழந்தைகளும்  திகைத்துப் போய் நின்றார்கள். அவர்களால் நம்ப முடியவில்லைஅவர்களின் அத்தனை சந்தோசங்களும் ஒரு நொடியில் உடைக்கப்பட்டது.
ஏம்மா எறங்க சொல்லுற? உங்க அப்பா வரவேணாமா? எறங்கு.
இரண்டு பேரும் என்னைக் கவனிக்காமல் அம்மாவின் பதற்றத்தில் அவசர அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தனர்.
குழந்தைகள் வருத்தப்படுவதில் இவ்வளவு ஓலம் இருக்கிறதா..? அவர்களின் அப்பா வந்துவிடக் கூடாதா? அந்த இரண்டு குழந்தைகளும் மீண்டும் வந்து அதே சந்தோசத்துடன் எனக்கு அருகில் அமர வேணடும் என்று யாரையோ நினைத்துக் கொண்டேன்
இரண்டு குழந்தைகளும் இறங்குவதைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் பையன் தான் ரொம்பவும் வேதனை அடைந்திருக்கிறான் போல. பேருந்து நகர்ந்து கொண்டிருந்ததையே பார்த்துக் கொண்டிருந்த ஏக்கமான பார்வை என்னைக் குடைந்துவிட்டது.
பேருந்தின் பின் கண்ணாடி வழியாக பார்த்தபோது
அவர்களின் அப்பா வந்துவிட்டிருந்தார். ஆனால் பேருந்து மிக தூரத்தில் வந்துவிட்டது. நிறுத்திவிடலாமா என்ற எண்ணம் பலிக்கவில்லை. வேகம் காட்டத் தொடங்கியது பேருந்து.
என்ன ஆச்சு எனக்கு? மனதில் ஏதோ ஒரு பிணைச்சல்.. திருச்சி சேரும் வரை குழந்தைகளின் அரட்டைகளைவிட திடீரெனக் கலைக்கப்பட்ட அவர்களின் சந்தோசமற்ற முகம் உறுத்திக்கொண்டே இருந்தது. அப்பாக்கள் மீது கோபம் தீர்ந்தபாடில்லை..
புதுக்கோட்டை பேருந்து நிலையம் வரும் பொழுதெல்லாம் அந்த இரண்டு சிறுவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை பேருந்தை நிறுத்திக் காட்டுவேன் என்கிற தைரியத்துடன்..

எல்லாரும் அதே பொருள்களை அப்படியே விற்றுக் கொண்டிருக்கிறாரக்ள். ரெண்டு இடத்தையும் தாண்டி இப்போ முதலில் நிற்கிறது பேருந்து. இன்னும் இரண்டு நிமிசத்தில் கிளம்பிவிடுமாம்
குழந்தைகள் குழந்தைகள் என்கிறது மனது…

Posted in: Read Complete Article»

3 கருத்துகள்:

Recent Comments

Copyright © 2013 எழுத்தாணி. WP Theme-junkie converted by BloggerTheme9
Blogger templates. Proudly Powered by Blogger.