பாரதியின் வாசனை பரவும் எட்டயபுரம். பாதை நெடுகிலும் பாரதியின் பிம்பங்கள். வழி நெடுகிலும் பாரதி இழுத்துவிட்ட மூச்சுக்காற்று. துண்டைக் கண்டாலே முண்டாசு ஞாபகம்.
எட்டயபுர பேருந்து நிலையத்தைக் கடந்து சிறிது தூரம் வந்தால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வருகின்ற பாரதி ஆவணக்காப்பகத்தைக் காணலாம்
பாரதி ஆவணக்காப்பகத்தின் இடது புறமாக பாரதிக்காக கட்டப்பட்ட மணிமண்டபம் கம்பீரமாகக் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
பாரதியின் அரிய நிழற்படம்.பாரதியின் தீவிரக் காதலன் தொ.மு.சி.ரகுநாதரின் அறக்கட்டளையும் இங்கு தான் இயங்கி வருகின்றது. அது குறித்துப் பிறிதொரு சூழலில் காணலாம்.
0 கருத்துகள்: