காரைக்குடி ஹிந்துமதாபிமான சங்கம்
மகாகவி பாரதியார் 1919 ஆம் ஆண்டு காரைக்குடிக்கு வந்திருந்து தங்கி
உரையாற்றிய இடம்
காரைக்குடி நகரத்தார் சிவன் கோயிலுக்குப் பின்புறம் இவ்வழகான கட்டிடம் அமைந்திருக்கிறது.
நிர்வாகி, பொறுப்பாளர், பணியாளர் என்கிற முறையில் சங்கக் கட்டிடம் பாதுகாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது.
இன்றும் பழைமை மாறாமல் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். அதிகமான வாசகர்களைக் கொண்டு இயங்கி வந்த இக்கட்டிடத்தில் மிகச் சொர்ப்பமான வாசகர்களே வந்து செல்கின்றனர். அதுவும் தினசரி நாளிதழ்கள் என்றளவில் உள்ளது.
இதன் மேல்தளத்தில் காந்தியடிகள் உட்பட மிக முக்கியமானவர்களின் அரிய புகைப்படங்கள் உள்ளன.
ஹிந்துமதாபிமான சங்கத்தின் செயல்பாடு குறித்துப் பாரதி பாடியுள்ள பாடலின் கல்வெட்டுப் பிரதி
இவைமட்டுமல்லாது மிக மிக அரிய நூல்கள் பலவற்றை இச்சங்கத்தார் இன்றளவில் பராமரித்து வருகின்றனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பெற்ற செநதமிழ் இதழ்கள் பெரும்பான்மையாக இங்குக் கிடைக்கின்றன.
எழுத்தாணி /  at பிப்ரவரி 29, 2016 / 
காரைக்குடி ஹிந்துமதாபிமான சங்கம்
மகாகவி பாரதியார் 1919 ஆம் ஆண்டு காரைக்குடிக்கு வந்திருந்து தங்கி
உரையாற்றிய இடம்
காரைக்குடி நகரத்தார் சிவன் கோயிலுக்குப் பின்புறம் இவ்வழகான கட்டிடம் அமைந்திருக்கிறது.
நிர்வாகி, பொறுப்பாளர், பணியாளர் என்கிற முறையில் சங்கக் கட்டிடம் பாதுகாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது.
இன்றும் பழைமை மாறாமல் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். அதிகமான வாசகர்களைக் கொண்டு இயங்கி வந்த இக்கட்டிடத்தில் மிகச் சொர்ப்பமான வாசகர்களே வந்து செல்கின்றனர். அதுவும் தினசரி நாளிதழ்கள் என்றளவில் உள்ளது.
இதன் மேல்தளத்தில் காந்தியடிகள் உட்பட மிக முக்கியமானவர்களின் அரிய புகைப்படங்கள் உள்ளன.
ஹிந்துமதாபிமான சங்கத்தின் செயல்பாடு குறித்துப் பாரதி பாடியுள்ள பாடலின் கல்வெட்டுப் பிரதி
இவைமட்டுமல்லாது மிக மிக அரிய நூல்கள் பலவற்றை இச்சங்கத்தார் இன்றளவில் பராமரித்து வருகின்றனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பெற்ற செநதமிழ் இதழ்கள் பெரும்பான்மையாக இங்குக் கிடைக்கின்றன.
0 கருத்துகள்: