முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல் பரத்தையும்

சங்க ஏடு - கர்ப்பிணி தலைவியும் காதல்                              பரத்தையும் பண்டைக் காலத்தில் ஆண் , பெண் உறவுமுறையினூடாக நம் முன்னோர்களின் குடும்பப் பின்னனியை ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடிகிறது . திணை அடிப்படையில் நிலத்தினைப் பிரித்து ஒவ்வொரு ( குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை ) நிலத்திற்கும் ஒவ்வொரு வகையான ஒழுக்கங்களை ( பழக்கவழக்கங்கள் என்று ஊகித்துக்கொள்க ) சுட்டியுள்ளனர் . இவற்றுள் மருதத்திணை ஏனைய திணைகளைக் காட்டிலும் குடும்பப் பின்னனியைச் சார்ந்தது என்று குறிப்பிடலாம் . தலைவன் , தலைவி , தோழி மூவரும் முக்கியக் கதாபாத்திரங்கள் . இம்மூவருக்குமிடையேதான் பெரும்பாலும் உரையாடல் நிகழ்ந்திருக்கிறது . அப்படி உரையாடும் பொழுது வெறும் கருத்தை மட்டுமே கூறுவதாகப் புலவர்கள் பாடலைப் புனையவில்லை . இயற்கையை வருணித்து அதனூடாகத் மாந்தர்களது உணர்வுகளைப் பதிவு செய்துள்ளனர் . அப்படி ஒரு அருமையான குடும்பப் பின்னனியில் அமைந்துள்ள கருத்து வருமாறு :   ...

பக்கோட்டி

பக்கோட்டி “மஞ்சுவிரட்டும் மாட்டுவண்டிப்பந்தயமும் நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இத்தடை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது” என்ற செய்தியறிக்கையைக் கேட்டுவிட்டுப் பலருக்கு பதபதைப்பு ஏற்பட்டது உண்மைதான். அதில் பெரும்பாலானோர் மஞ்சுவிரட்டிற்குத் தடை என்பதை எதிர்த்துப் போராடவும் தொடங்கிவிட்டனர்.  தங்கவேலு எந்த ஊரில் தட்டுவண்டிப் பந்தயம் நடந்தாலும் நடந்தே போய்ச்சேந்துடுவான். கைக்குத் துணையா அவன் மச்சினன் முருகரத்தினமும் கூடவே திரிவான். ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து குடிக்கிறதும் ஊர்நாயம் பேசுறதும் முக்கியமான இடங்கள்ல முக்கியமான ஆள்மாதிரி காட்டிக்கிறதும் இவனுகளுக்குக் கைவந்த கலை. இவய்ங்க நடந்து போன பிறகு பின்னாடி நின்னு புரணி பேசுற ஆள்தான் நிறைய பேர். நேருக்கு நேராக யாரும் பேசுறதில்ல. பேசுனா அன்னைக்கு முழுசும் இவய்ங்க அலப்பறதான். ஊரக்கூட்டி ரெண்டாக்கிப்புடுவாய்ங்க.. அரண்மனைப்பட்டி மாகாணத்தில் தட்டுவண்டிப்பந்தயம் காலங்காலமாக நடத்தி வருகின்ற கோயில் நிகழ்ச்சி. அதிலும் அரிச்சானூர் பந்தயம் என்றால் சிறுசு பெருசு அத்தனையும் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு காலையிலேயே கெளம்பிவிடும். ...

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள்

சங்க ஏடு - சுரசுரப்பான கைகள் ஒருநாள் பொழுதில் கபிலரும் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்பொழுது மன்னன் கபிலரின் கையைப் பற்றிக்கொண்டு “புலவரே உமது கை மிகவும் மென்மையாக உள்ளதே” என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதுகேட்ட கபிலருக்குச் சொல்லவா வேண்டும் உதித்துவிட்டது பாடல்.   புதுக்கவிதை வடிவம் கணைய மரங்களின் காலுறிக்கும் வலிமை முதல் வேலையே எதிர்ப்போரை உதிர்த்தல்தான் இப்படிக் கடுங்கோபம் கொண்ட சிறுகண்ணுடைய யானையை வேலைப்பாடு பொருந்திய அங்குசம் கொண்டு அதன் அருகில் சென்று மதத்தை அடக்கி வீரத்தைக் காட்டி நிற்கின்ற கைகள் அது.. பாதாளக் கிணற்றைக் கவனமாய்க் கடப்பதற்கு குதிரையின் பிடிவாரை சுண்டி இழுக்கின்ற கைகள் அது.. நயமிக்க தேரில் நின்றுகொண்டு எதிரிகளை அன்பால் முடியாது என்று அம்பால் வீழ்த்த வில்லினை இழுத்து விடுகின்ற கைகள் அது.. இத்தனை வேலைகளைச் செய்யும் உன் கைகள் பஞ்சுபோல் இருக்க வாய்ப்பில்லை அதுதான் இறுகிப்போய் உள்ளன.. நாங்கள் அவ்வாறில்லை.. காய்களையும் கறிகளையும் உண்டு உடல் வருத்தி வேலை செய்ய...

பழைய பேருந்து நிலையம்

           பழைய பேருந்து நிலையம் பலாப்பலோய் .. பலாப்பலோய் .. பாக்கெட்டு பத்துருவா .. தேன்சொலை தேன்சொலை இப்படி அந்த வியாபாரி கத்துனது பல பேருக்கு எரிச்சல உண்டாக்கி இருக்கனும் . யார்ரா இவன் காதுக்குள்ள வந்து கத்திக்கிட்டு ? னு தூக்கத்துல திட்டிக்கிட்டே மறுபடியும் ஒரு பெரியவர் தூங்குனத என்னைத் தவிர அநேகம் யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை .   காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு வர அதிகபட்சம் இரண்டரை மணிநேரம் என்பது பழக்கப்பட்ட பயணிகளுக்குத் தெரியும் . என்னமோ தெரியல அந்த டிரைவர் இழு இழுனு 3 மணி நேரத்திற்கு இழுத்துட்டார் .. திருச்சிக்கு வருவதென்றால் பெரும்பாலும் சென்னை போகிற பேருந்து நின்றால் நடத்துனர் அனுமதியோடு ஏறிவிடுவேன் . விழாக் காலங்களில் ஏறுவது சிரமம் . அப்பொழுது ஒன் டு ஒன் பேருந்து நின்றால் ஏறுவது வழக்கம் . இந்த மாதிரியான பழக்கத்திற்குக் காரணம் காரைக்குடி – திருச்சி வழிப்பாதையில் ஏராளமான நிறுத்தங்களும் , கூட்ட நெரிசலும் தான் . எது எப்படியோ சாதாரண பேருந்திலோ எக்ஸ்...