குளத்தங்கரைப்
பிள்ளையார்
பொங்கல்
வைத்தாகிவிட்டது. கொண்டக்கடலையும் நன்றாக வெந்து விட்டது..
அதனதற்குரிய பாத்திரங்க
ஏம்ப்பா
பாலு அந்த மஞ்சப்பைல சூடம்,
சாம்புராணி, ஊதுபத்திலாம் இருக்கானு பாருப்பா. அப்புறம் அய்யரு வந்து கேக்குறப்போ
அத காணோம் இத காணோம்னு
சொல்லாம…
எல்லாம்
இருக்கு சித்தி. நீங்க போய்
ஆக வேண்டிய காரியங்களப் பாருங்க..
என்னப்பா
இந்த அய்யர இன்னும் கானோம்…
என்று முணுமுணுத்துக்கொண்டே பச்சக் கலர் சேலையை
இடுப்பில் நன்றாகச் சொருகிக் கொண்டு தாங்கித் தாங்கி
நடந்தாள் அமுதவல்லி..
அந்தப்
பிள்ளையார் பெயர் பாரத விநாயகர்..
ஒருமுறை பிள்ளையார் பால் குடிக்கிறதாகக் கேள்விப்பட்டுப்
பாரத விநாயகருக்குச் சொம்பு சொம்பாகப் பால
ஊத்துனது நான்தான்.. சும்மா சொல்லக் கூடாது
பாரத விநாயகரும் சொம்பு சொம்பா குடிச்சது
நல்லா ஞாபகம் இருக்கு.. ஆறுமுகம்
அண்ணாதான் அட லூசுப்பயலுகலா சாமி
பால் குடிக்கலடா கல்லு தாண்டா குடிக்குதுனு
நாத்திகம் பேசிக்கிட்டு இருந்தாரு.. ஆனா அது உண்மைதானு
ரொம்ப நாள் கழிச்சுதான் புரிஞ்சது.
கல்லு இறுகிப் போயிருந்ததால பால்
உள்ள போயிட்டே இருக்குமாம்.. பால ஊத்தாம வெறும்
தண்ணிய ஊத்துனாலும் பிள்ளையாரு குடிச்சுக்கிட்டே தான் இருப்பாருனு ஆறுமுகம்
கிண்டல் பண்ணிட்டே இருந்தாரு.. அப்போ அவர புடிக்கவே
இல்ல சாமிய கிண்டல் பண்ற
இவரு நல்லாவே இருக்க மாட்டாருனு
திட்டிட்டே இருந்தேன்..
இப்பவும்
சாமிதான் எல்லாமேனு வாழ்ற சாமானியன்தான். ஆனால்
சாமியே கதினு இருக்குறவன் இல்ல..
இந்தப்
பாரத விநாயகருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு ஏழாவது
படிக்குற காலத்துல இருந்து காலேஜ் படிக்குற
காலம் வரைக்கும் பாரதவிநாயகர் பக்கத்துல உக்காந்துதான் படிப்பேன்.. கோயில் அவ்வளவு பெரிது
கிடையாது. சிலை மட்டுமே ஒரு
பெரிய திண்ணையில் இருக்கும். வெட்ட வெளியில் கம்பீரமாக
கருத்த உருவத்துடன் அமர்ந்திருப்பார். தனிமை சூழ்ந்து அமைதியாக
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் படிப்பதற்கு இதுதான் சரியான இடம்
என்று எப்போதோ என் மனம்
தெரிவுசெய்து கொண்;டுவிட்டது.
பிள்ளையாருடைய
வயிறு மீது எனக்கு எப்போதும்
பிரியம்.. சில நாட்களில் வயிறு
மீது தiலையை வைத்துக்
கொண்டு அசந்து தூங்கிய அனுபவமும்
உண்டு..
துதிக்கையும்
காதும் எப்போதும் பிரமிப்பாகவே எனக்குத் தெரியும்..
நாளாக நாளாகப் பாரத விநாயகருடன்
நான் பேச ஆரம்பித்துவிட்டேன்.. கல், சாமி
என்பதையும் தாண்டி சக நண்பனிடம்
பேசுவது போலாயிற்று..
டேய் என்னத்தடா பாத்துக்குட்டு இருக்க..? என்னமோ புதுசா பாக்குறவன்
மாதிரி..? என்று சித்தி அதட்டியதும்
தான் பிள்ளையாரிடமிருந்து நினைவு திரும்பியது..
அய்யரு
எப்ப வருவாராம் சித்தி..?
பெரிய ஆளுங்க கோயிலு அம்பலகாரர்
கோயிலு செட்டி ஊரணி கோயிலுக்குலாம்
முடிச்சுட்டுதான் நம்ம கோயிலுக்கு வருவாராம்.
அய்யரு இன்னிக்கு ரொம்ப பிஸியாம்.. பிள்ளையார்
சதுர்த்தில..
சிறுசுகள்
எல்லாம் களிமண்ணுல பிள்ளையார் செஞ்சு
அதுக்குல நெறைய காசுகள அமுக்கி
வச்சுருக்கானுங்க.. அய்யரு அபிN~கம்
பண்ணதும் இந்தக் களிமண் பிள்ளையார
தண்ணிக்குள்ள அமுக்கி காசுகள எடுக்க
ரெடியா இருக்கானுங்க..
யாரோ ஒருத்தனோட பிள்ளையாருக்குள 30 ரூவாக்கிட்ட அமுக்கி வச்சுருக்குறதா பொரளிய
கௌப்பிவிட்டாய்ங்க..
எனக்கும்
ஆசதான் யாரோட பிள்ளையார இருக்கும்னு
தெரிஞ்சுக்க..
இந்த அய்யரு எப்பத்தான் வருவாராம்..?
என்று சோனமுத்து அய்யா கோபத்தோட சத்தம்
போட ஆரம்பிச்சாரு..
நானும்
அந்தக் களிமண் பிள்ளையார பாக்குறத
விட்டுட்டு பாரத விநாயகர் பக்கமா
வந்து நின்னுட்டேன்..
நல்ல கூட்டம். போன வருசம் கூட
இவ்ளோ பேர் வரல.. நாளுக்கு
நாள் சாமி பக்தி மக்கள்ட
கூடிட்டே போகுதுனு மனசுக்குல நினைக்காம இருக்க முடியல..
அய்யரு
வந்துட்டாருப்பா..
அய்யரு
வந்துட்டாரா..?
அய்யரு
வர்றாராம் சித்தி.
என்று எல்லாரும் முணுமுணுத்தபடி அய்யரு வரவ நோக்கி
நின்னுட்டு இருந்தோம்.
அய்யர்
பேரு சிவசங்கரனாம். புதுசாட்டாம் இருக்காரு. ஆனா வயதானவர். தண்ணீர்ல
பாரத விநாயகர நல்லா குளிப்பாட்டிவிட்டு
முறைப்படி பூசைகளைச் செய்து கொண்டிருந்தார். மாலைய
கொண்டாங்கோ.. பால் இருக்கா..? சந்தனம்..?
அருகம் புல்லைக் கடைசியா கொடுங்கோ.. பரபரப்பாக
பேசிக்கொண்டே கணநேரத்தில் பூசையை முடித்துவிட்டார்..
கும்புட்டுக்கோங்கோ…
ஓம் கணபதி நமக..
ஓம்……………………..
நமக..
எல்லோரும்
கையை உயர்த்திக் கும்பிட சூடத்தட்டும் மணியோசையும்
ஒலிக்க வெற்றிகரமாக பூசையை முடித்துக்கொண்டார் அய்யர்..
பொங்கலும்
சுண்டலும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணவில்லை..
பூசையை
முடிப்பதற்குள் களிமண் பிள்ளையாரும் காணவில்லை..
தண்ணீருக்குள் களிமண் பிள்ளையார் சிறுசுகளால் கொடூரமாகக்
கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்..
அய்யர்
சத்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்டுக்கொண்டே
இருந்தது..
சித்தியிடம்
ஏதோ காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.. பக்கத்தில் சென்று கேட்டபோது பூசைக்குரிய
தொகை போதவில்லையென்று சித்தியிடம் வம்பு பண்ணிக்கொண்டிருந்தார்..
இதுக்குத்தான்
உங்க பக்கம் நாங்க பூசை
பண்ண வர்றதே இல்ல..
என்று சொலிலிவிட்டு அய்யர் மோட்டார் வண்டியை
முருக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
பாரத
விநாயகர் முற்றிலுமாகக் காணவில்லை…
0 கருத்துகள்: