முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குளத்தங்கரைப் பிள்ளையார்

                  குளத்தங்கரைப் பிள்ளையார் பொங்கல் வைத்தாகிவிட்டது . கொண்டக்கடலையும் நன்றாக வெந்து விட்டது .. அதனதற்குரிய பாத்திரங்க ளில் பரிமாறி மூடி வைக்கப்பட்டுள்ளன . ஏம்ப்பா பாலு அந்த மஞ்சப்பைல சூடம் , சாம்புராணி , ஊதுபத்திலாம் இருக்கானு பாருப்பா . அப்புறம் அய்யரு வந்து கேக்குறப்போ அத காணோம் இத காணோம்னு சொல்லாம … எல்லாம் இருக்கு சித்தி . நீங்க போய் ஆக வேண்டிய காரியங்களப் பாருங்க .. என்னப்பா இந்த அய்யர இன்னும் கானோம் … என்று முணுமுணுத்துக்கொண்டே பச்சக் கலர் சேலையை இடுப்பில் நன்றாகச் சொருகிக் கொண்டு தாங்கித் தாங்கி நடந்தாள் அமுதவல்லி .. அந்தப் பிள்ளையார் பெயர் பாரத விநாயகர் .. ஒருமுறை பிள்ளையார் பால் குடிக்கிறதாகக் கேள்விப்பட்டுப் பாரத விநாயகருக்குச் சொம்பு சொம்பாகப் பால ஊத்துனது நான்தான் .. சும்மா சொல்லக் கூடாது பாரத விநாயகரும் சொம்பு சொம்பா குடிச்சது நல்லா ஞாபகம் இருக்கு .. ஆறுமுகம் அண்ணாதான் அட லூசுப்பயலுகலா சாமி பால் குடிக்கலடா கல்லு தாண்டா ...

இளங்கன்று

  இளங்கன்று அந்தக் கன்றுக்குட்டி நிச்சயமாக நடிக்கவில்லை வெறுந்தரையை உற்றுநோக்குகிறது.. சுரக்காத காம்பினை முட்டிக் கொள்கிறது பசுவின் சிறுநீரில் நனைந்து கொள்கிறது சானமிட்டதும் வெறித்துப் பார்க்கிறது வைக்கோலைத் தானும் சாப்பிடுவதுபோல் பாசாங்கு காட்டுகிறது துள்ளிக் குதித்துப் பிறகு திரும்பி விடுகிறது பசுக்கயிற்றை அவிழ்க்க வரும் கிழவியைக் கெட்ட வார்த்தை பேசவைக்கிறது பசுவுடன் நடந்து சென்று வெறித்துப்போய் வீடு வருகிறது வாய்க்கூடு போட்டாலும் நாய்ப்பீயை மோந்து பார்க்கிறது வாலை ஆட்டியாட்டிக் கிண்டல் புரிகிறது கழுவ வைத்திருந்த பாத்திரங்களை உருட்டிச் செல்கிறது நிச்சயமாக அது நடிக்கவில்லை திண்ணையில் உட்கார்ந்திருக்கும் எனக்கும் தொழுவத்தில் நின்றுகொண்டிருக்கும் பசுவிற்கும் ஏதோ சொல்ல ஆசைப்படுகிறது அதுவரை நாங்கள் அசைபோட்டுக் கொண்டிருக்கிறோம்..

சங்க ஏடு : தேன்சுவையை விட இனிது

சங்க ஏடு : தேன்சுவையை விட இனிது ஒரு நல்ல நாளில் தலைவனுடன் சென்று இல்லறத்தைச் சீரும் சிறப்புமாக நடத்திவிட்டு பிறிதொரு நாளில் மீண்டும் தனது பிறந்த வீட்டிற்குத் தலைவி வருகின்றாள். அப்பொழுது தலைவியின் தோழி “ஏன்டியம்மா நீ வாழ்க்கைப்பட்டுப் போன உன் தலைவனது ஊரில் குடிப்பதற்கு ஒரு நல்ல தண்ணீர் கூட இல்லையாமே?” என்று தலைவியை நோக்கிக் கேட்கின்றாள். அதற்குத் தலைவி யார் சொன்னது என்று மறு வினா எழுப்பித் தனது தலைவனின் ஊர்ப்பெருமையை எடுத்துரைக்கிறாள். எப்படி என்கிறீர்களா? கவிதை வடிவம் உயிரினும் மேலான தோழியே நான் கூறுவதைச் சற்று செவிமடுத்துக் கேட்பாயா..? ஆம் கொஞ்சம் விரும்பித்தான் கேளேன் தோழி..! என் தலைவனது நாட்டில்  வறுமை இருக்கிறதா என்றெல்லாம் தெரியாது ஆனால் தண்ணீர் வற்றிய ஒரு கிணற்றின் அடிப்பகுதியை ஒருநாள் கண்டேன் கிணற்றின் தாழ்வாரப் பகுதியில் தழைகள் உதிர்ந்து மூடப்பட்ட நிலையில் சிறிதளவு தண்ணீருடன் அந்தக் குழி காணப்பட்டது அந்தச் சிறிதளவு தண்ணீரையும் அங்கு அலைந்து திரிந்த மானானது உண்டு கலக்கிவிட்டுச் சென்றது.. அந்தக் கலங்கள் நீரை எடுத்து நான் ...