முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TELENT ARTS AND SCIENCE COLLEGE

ஏன் TALENT ARTS AND SCIENCE COLLEGE-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்? ஒரு மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான முடிவு சரியான கல்லூரியைத் தேர்வு செய்வதே. TALENT ARTS AND SCIENCE COLLEGE கல்வித் தரம், ஒழுக்கம், மற்றும் முழுமையான மனித வளர்ச்சி ஆகியவற்றில் தனித்துவம் பெற்ற ஒரு கல்வி நிறுவனம் ஆகும். 🌟 கல்வித் தரம் எங்கள் கல்லூரி உயர்தர பாடத்திட்டம், அனுபவமிக்க பேராசிரியர்கள் மற்றும் முறையான கல்வி கண்காணிப்பு மூலம் சிறந்த கல்வியை வழங்குகிறது. கோட்பாடும் நடைமுறையும் ஒருங்கிணைந்த கற்றலை நாம் முக்கியமாகக் கருதுகிறோம். 👩‍🏫 அனுபவமிக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தகுதி வாய்ந்த, அனுபவமிக்க ஆசிரியர்கள் எங்களின் பெருமையாகும். ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் அளிக்கப்படுகிறது. 🎓 வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட பாடநெறிகள் இன்றைய தொழில் மற்றும் சமூக தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பாடநெறிகள் மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்பு திறன்கள், சிந்தனைத் திறன் மற்றும் தன்னம்பிக்கை பெறுகின்றனர். 🧪 நவீன கட்டமைப்பு மற்றும் வசதி...
சமீபத்திய இடுகைகள்

கவிதை

மனோன்மணியம்- தமிழ்த் தெய்வ வணக்கம் பெ.சுந்தரனார்

                                                        தமிழ்த் தெய்வ வணக்கம்                                              மனோன்மணியம் - பெ.சுந்தரனார் 1) நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே  விளக்கம்        நீர் நிறைந்த கடல் எனும் ஆடையை உடுத்திய நிலம் எனும் பெண்ணுக்கு, அழகு ஒழுகக்கூடிய சிறப்பு நிறைந்த முகமாகத் திகழ்கின்ற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த தமிழர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்தத் திலகத்தில் இருந்த...

ஆன்டி இண்டியன் - விமர்சனம்

ஆன்டி இண்டியன் படத்தின் துவக்கத்திலிருந்தே மாறுபட்ட உத்திகளைக் (யதார்த்தம் எனும் உத்தி) கையாண்டிருக்கிறார் இயக்குநர் புளூ சட்டை C.இளமாறன். சின்ன சின்ன வார்த்தைகளுக்காகவும் பின்புறப் படங்களுக்காகவும் பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்ற இன்றைய சூழலில் இது மாதிரியான படம் வெளிவந்திருப்பது அதிர்ச்சி மிகுந்த வரவேற்புதான். ஆம், அந்த அளவிற்கு மதம் பேசப்பட்டிருக்கிறது. மதங்களின் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதத்திற்குள்ளான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. மதங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல் பேசப்பட்டிருக்கிறது. நிச்சயம் தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இது இருக்கும். ஏனென்றால் இந்தப் படம் பேசிய துணிச்சலான வசனங்களை வேறு படங்கள் பேசவில்லை என்பதுதான் இதற்கான காரணம். தொழில்நுட்பம், இசை, ஒளிப்பதிவு என்று பல கோளாறுகள் இருப்பதாக அறிவு நிபுணர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு படைப்பிற்கு இவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.  இந்தச் சமூகத்திற்குச் சொல்ல நினைத்தவொன்றைச் சமரசம் இல்லாமல் தனது மனத்திற்குப் பிடித்தபடி சொல்லியிருக்கிறோமா? என்பதுதான் பிரதானம்.    இந்தப் படத்...

சிலப்பதிகாரம் மனையறம்படுத்தகாதை இரண்டு மதிப்பெண் வினாக்கள்

மனையறம்படுத்த காதை சிலப்பதிகாரம்

செங்கழனிக் கோழி

ஆசையாய் வளர்த்த பெட்டைக்கோழி திடீர் விருந்தால் மயிர்பறித்து மசாலாவானது வாசனை மூக்கைத் துளைத்தாலும் கொதிப்புச் சததம் நெஞ்சை வெடிக்கச் செய்தது சோற்றில் கிடந்த ஈரல் இதயத்தைக் கனக்கச் செய்தது தட்டின் ஓரத்தில் கிடந்த கழுத்துப்பகுதி எனது குரல்வளையை நெருக்கியது சதைக்கறி அத்தனையும் எனது தசைநார்களைக் கிழித்துக் கொண்டிருந்தன வந்த விருந்தினன் கைகழுவி வாய்துடைத்தார் நான் இன்னும் சோற்றின் இடுக்குகளில் என் கோழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்திற்குப் பின்னர் நான் எழுதுகின்ற விமர்சனம் அல்லது ஒரு படைப்பு மீதான   மதிப்பீடுதான் இந்தப் பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். பருத்திவீரன் படத்திற்குப் பிறகு தமிழ்ச் சினிமா ஒரு மாற்றுச் சிந்தனையை இடைக்கொண்டு பயணித்து வந்திருப்பதைப் பலரும் அறியவியலும். சுப்பிரமணியபுரம், மைனா, கழுகு, நெடுஞ்சாலை, ஆரண்யகாண்டம், மதுபானக்கடை, தென்மேற்குப் பருவக்காற்று, வெண்ணிலா கபடிக் குழு, தங்கமீன்கள், ரேனிகுண்டா, பரதேசி, மூடர்கூடம், குக்கூ, ஜோக்கர், அட்டகத்தி, பீட்சா, டிமான்டி காலனி, மெட்ராஸ், அருவி, மேற்குத் தொடர்ச்சி மலை என்று அடுக்கிச் செல்லும் அளவிற்கு ஒரு மாற்றுச் சிந்தனையைத் தமிழ்ச் சினிமா தன்னுள் தகவமைத்துக் கொண்டு வந்துள்ளது. “பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல். மேல ஒரு கோடு” விடுபட்டுப் போன கதைக்களத்தின் மிச்ச சொச்சம். ஆம் இது சாதிவெறி பிடித்தோரைத் தோலுரிக்கின்ற கதை. திருாநல்வேலி பகுதியைக் கதைக்களமாகக் கொண்ட இக்கதையின் டைட்டில் கார்டு இருட்டிலிருந்து வெளிச்சம், வெளிச்சத்திலிருந்து இருள் என்கிற முறையில் அமைத்துக்கொண்டு வறட...

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல்

சிலம்பு நா.செல்வராசு : ஆய்வு முறையியல் (பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் பணி ஓய்வினை முன்னிட்டு சீர்காழி விவேகானந்தர் கல்லூரியில் நிகழ்த்தப்பெற்ற பேராசிரியரின் நூல்கள் முன்னெடுக்கும் ஆய்வு முறையியல் பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் கட்டுரை அளிக்க  வாய்ப்பமைந்தது. வாழ்க்கையில் உண்டான வரலாற்றுத் தருணம்.         நன்றி பேரா சு.தமிழ்வேலு, பேரா.இரா.அறவேந்தன், பேரா.சிலம்பு நா.செல்வராசு)  கட்டுரை கீழ்வருமாறு     தமிழியல் ஆய்வு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்தேறியுள்ளன. அவை காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு அமைந்தவை. அவ்வகையில் இக்காலத் தமிழியல் ஆய்வு வரலாற்றில் தவிர்க்கவியலா ஆளுமையாகத் திகழ்பவர் சிலம்பு நா.செல்வராசு. இவரது ஆய்வுப் போக்குகள் தனித்தன்மை வாய்ந்தவை. அத்தகைய தன்மைகள் வழியாகத் தமிழியல் ஆய்வு நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டுவதும் அடுத்தத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய ஆய்வியல் சிந்தனைகளை எடுத்துரைப்பதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். 1.தமிழாய்வுத்தடம் 1887 ஆம் ஆண்டு சி.வை.தா.வ...