முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்க ஏடு : தேன்சுவையை விட இனிது

சங்க ஏடு : தேன்சுவையை விட இனிது


ஒரு நல்ல நாளில் தலைவனுடன் சென்று இல்லறத்தைச் சீரும் சிறப்புமாக நடத்திவிட்டு பிறிதொரு நாளில் மீண்டும் தனது பிறந்த வீட்டிற்குத் தலைவி வருகின்றாள். அப்பொழுது தலைவியின் தோழி “ஏன்டியம்மா நீ வாழ்க்கைப்பட்டுப் போன உன் தலைவனது ஊரில் குடிப்பதற்கு ஒரு நல்ல தண்ணீர் கூட இல்லையாமே?” என்று தலைவியை நோக்கிக் கேட்கின்றாள். அதற்குத் தலைவி யார் சொன்னது என்று மறு வினா எழுப்பித் தனது தலைவனின் ஊர்ப்பெருமையை எடுத்துரைக்கிறாள். எப்படி என்கிறீர்களா?

கவிதை வடிவம்

உயிரினும் மேலான தோழியே
நான் கூறுவதைச் சற்று
செவிமடுத்துக் கேட்பாயா..?
ஆம் கொஞ்சம் விரும்பித்தான்
கேளேன் தோழி..!
என் தலைவனது நாட்டில் 
வறுமை இருக்கிறதா
என்றெல்லாம் தெரியாது
ஆனால்
தண்ணீர் வற்றிய
ஒரு கிணற்றின்
அடிப்பகுதியை ஒருநாள் கண்டேன்
கிணற்றின் தாழ்வாரப் பகுதியில்
தழைகள் உதிர்ந்து
மூடப்பட்ட நிலையில்
சிறிதளவு தண்ணீருடன்
அந்தக் குழி காணப்பட்டது
அந்தச் சிறிதளவு தண்ணீரையும்
அங்கு அலைந்து திரிந்த
மானானது உண்டு
கலக்கிவிட்டுச் சென்றது..
அந்தக் கலங்கள் நீரை
எடுத்து நான் உண்டேன்
அடடா..
என்ன சுவை..
என்ன ஆனந்தம்..
உண்மையில் அந்தத் தண்ணீர்
நம் வீட்டின்
தோட்டத்தில் உள்ள
தேனை எடுத்து அதில்
பால் கலந்து
இனிமை என்று கூறுவாயே.?
அதைவிட மலமடங்கு
இனிமையுடையது
என் தலைவன் நாட்டில் உள்ள
கலங்கள் நீர்..!
இந்தக் கவிதைக்குரிய சங்க இலக்கியப் பாடலைப் பாருங்கள். ஐங்குறுநூற்றுப் பாடல் அது.

                                  அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பை
                                 தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
                                  உவலைக் கூவற் கீழ
                                  மானுண்டு எஞ்சிய கலுழி நீரே    (ஐங்.குறிஞ்.203)  

  உரைவடிவம்

அன்னையே! நான் கூறுவதை சற்று விரும்பிக் கேட்பாயாக. எம் தலைவனது நாட்டில் தாழ்ந்த பள்ளத்தில் சருகுகள் மூடப்பட்ட நிலையில் கிடந்த சிறிதளவு நீரினை அங்கிருந்த மான் ஒன்று கலக்கிவிட்டுச் சென்றுள்ளது. அந்தத் தண்ணீரை நான் உண்டபொழுது அன்றொரு நாள் நம் வீட்டுப் படப்பையில் கட்டியிருந்த தேனை எடுத்து அதனுடன் பால் கலந்து தருவாயல்லவா! அந்தச் சுவையினும் மிகுந்த சுவையுடையது.

அருஞ்சொற்பொருள்

படப்பை – வீட்டுத் தோட்டம், உவலை – தாழ்ந்த (அல்லது) உலர்ந்த சருகுகள், கூவல் – நீர் பெறுதலுக்காக அகலப்பட்ட குழி, கலுழி – கலங்கள்

கருத்து

புகுந்த வீட்டு நெருக்கடிகளைத் தன் பிறந்த வீட்டில் சொல்லாமல் புகழ்பாடி வாழந்த பெண்டிர் நம் தமிழ்ப்பெண்கள். இந்நிகழ்வுகளை இன்றும் நம் கிராமங்களில் காணலாம். இதன் வளர்ச்சியே கணவன் பெயரைக் கூட மனைவிமார்கள் சொல்லாமல் வாழ்ந்தது என்று கருத இடமளிக்கிறது.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழமொழி ஐந்நூறு

                                             பழமொழி 500 அனைவருக்கும்  தெரிந்த பழமொழிகளைப் பயன்பாடு கருதிப் பதிவிடுகிறேன். இதன் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து உதவியவர். ஏ.மேனகா, கணினி-வணிகவியல் துறை மாணவி, கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மாணவி, திருச்செங்கோடு. 1)அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் 2)அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் 3)அடியாத மாடு படியாது 4)அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் 5 )அத்திப் பூத்தாற் போல் 6)அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா? 7)அரசனை நம்பி புருஷனைக் கைவிடலாமா? 8)அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் 9)அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் 10)அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும் 11)அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 12)அறிவே சிறந்த ஆற்றல் 13)அனுபவமே சிறந்த  ஆசான் 14)அன்பே கடவுள் 15)ஆசைக்கு அளவில்லை 16)ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம் 17)ஆணுக்கு ஒரு நீதி.. பெண்...

தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள் செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்

    தமிழாய்விற்குச் சிற்றிதழ்கள்  செய்தனவும் செய்து கொண்டிருப்பனவும்               - முனைவர் ம.லோகேஸ்வரன்       கொங்குதேர் வாழ்க்கையுடைய அஞ்சிறைத்தும்பியைக் காமம் செப்பாமல் கண்டதைச் சொன்னதிலிருந்து தமிழாய்வு தொடங்கிவிட்டது என்பர். அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் ஒரு தமிழ்ப்படைப்பு வெளியிடப்பெற்றுச் சான்றோர் பலரின் முன்னிலையில் விவாதங்களுக்கு உட்பட்டு கருத்தறிந்து மேற்கொள்ளப்பெற்றுள்ளது. இதற்குத் தொல்காப்பியம் முதலான பண்டை இலக்கியங்கள் தக்கச் சான்றுகளாகும். சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம், உரைச்சிறப்புப் பாயிரம் என்ற வகைப்பாடுகளெல்லாம் பனுவல் மீதான  ◌ாவசிப்பு மரபினை வெளிப்படுத்துகின்றன. வகை தொகைப்படுத்துதல், துறைக்குறிப்பு, கூற்றுக்குறிப்பு, உரையாக்கம் என்கிற வகைப்பாடுகளும் வாசிப்புப் பின்னணியில் நேர்ந்தவைகளேயாகும். ஆகவே ஒரு பனுவலை வாசித்தல் என்கிற பாரம்பரிய முறைமை ககாலத்திற்கேற்ப பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருக்கிறது. அஃது இன்றளவில் வாசிப்பு, ஆய்வு என்கிற இருநிலைகளில் வெவ்வேறு பொருள்பட நிற்கின...

செத்தான் சிதம்பரம்

அய்யோ சாகுற வயசா இது..? உன் தைரியத்த இனி யாருக்கிட்ட பாக்கப்போறேனோ..? சண்டாளன் எமனுக்கு அப்படி என்ன அவசரம்..? பாசக்கயிற வேற யாருக்காவது வீசியிருக்கக் கூடாதா..? மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து தெருவைச் சுத்திசுத்தி வந்து பெருங்கூட்டத்தையே கூட்டிவிட்டாள் சவுந்தியம்மா.. இந்தா எலவு வீட்டுல போய் அழுவாம ஊருக்குள்ள வந்து ஏன் ஒப்பாரி வைக்கிற..? கரகரத்த குரலில் பெரியகருப்பன் சத்தம் போட்டதும் சவுந்தியம்மா வாயை முந்தானையால் பொத்திக்கொண்டு அய்யோ ஒப்பாரி வைக்கக் கூட ஒசரம் இல்லாம போய்ட்டேனா என் ராசா… என்று புலம்பியபடி எலவு வீட்டை நோக்கிப் பறந்தாள் சவுந்தி.. யாருப்பா இந்தக் கெழவி ஒப்பாரி வச்சு ஊரையே கூட்டிப்புட்டா..? செத்துப்போயிருக்காரே சிதம்பரம,; அவரோட.. அவரோட..? அட சொல்லுப்பா அவரோட அத்த மவ ப்பா.. ப்ப்பூ அத்த மவதானா..? ஏன் நீ என்னனு நெனச்ச..? இப்படி பேச்சு வளந்து கொண்டே போனத முருகையாவால் பொறுத்திருந்து கேக்க இ~;டமில்ல.. வேகமாக நடயக் கட்டி வீட்டுக்காரங்களுட்ட பணம் வாங்கப் புறப்பட்டான்.. பாடை கட்ட மூங்கில், பானைமுட்டி, பாடை மாலை, அலங்காரப் பொருட்கள், வானவெடி, சுடுகாட்டுப் பொருட்கள் ...