முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புறம்போக்கு - 2015

    புறம்போக்கு திரைவிமர்சனம்     எஸ்.பி.ஜனநாதனின் அடுத்த கம்யூனிச படைப்புதான் புறம்போக்கு. இதற்கு முன். இயற்கை,  ஈ, பேராண்மை என்று ஐந்நிலங்களை மையமிட்டு நகர்ந்த எஸ்.பி.ஜேயின் கதையம்சம் தற்போது நேரடியாக இந்திய அரசியலமைப்பைச் சற்று உரசிப்பார்த்துள்ளது. கம்யூனியச தோழர் பாலுவின் (ஆர்யா) தூக்குத்தண்டனையை மையமிட்டு நடத்துகின்ற பரபரப்பு மூமென்ட்தான் படம். இதனூடாக இந்திய அரசியல், போராளிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான கருத்து முரண்கள், சிறைவாசிகளின் நிராகரிக்கப்பட்ட உணர்வுகள், எமலிங்கத்தின் (விஜய் சேதுபதி) வழியாக மனித மென்மைகள், போராட்ட உணர்வுகள் என்று படம் முழுக்க பாடம் போதித்துச் செல்கிறார் இயக்குநர். உரிமைக்காகப் போராடிய பாலுவின் தூக்குத்தண்டனை நியாயமற்றது என்று அவரைத் தப்பிக்கச் செய்ய அவரது தோழர்கள் எடுக்கும் ஹைடெக் பிளான்களே (கிட்டத்தட்ட) திரைக்கதை. கம்யூனிச கொள்கைகளைப் பாலு மூலமாகவும் இந்திய அரசியல் சட்ட தர்க்கக் கேடுகளை மெக்காலே (சியாம்) மூலமாகவும் போராட்ட உணர்வுகளை குயிலி (கார்த்திகா) மூலமாகவும் சாமானியனின் உணர்வை எமலிங்கம் (விஜய் சேதுபதி)...

நீர்நிலை உருவாக்கப் பின்னணி

நீர்நிலை உருவாக்கப் பின்னணி      சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துக் கிராமங்கள் பற்றிய அடைவு முயற்சிதான் இந்நூல். அதாவது கல்லல் ஒன்றியம் பழைமையை நினைவுபடுத்துகின்ற வகையில் ஏராளமான ஊர்ப்பெயர்களையும் நீர்நிலைப் பெயர்களையும் கொண்டு விளங்குகிறது. ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வுகள் ஏராளமாக வந்துகொண்டிருக்கிற சூழலில் ஊர்களில் மிக முக்கியமானதாகப் போற்றப்படுகின்ற குளம், ஊரணி, கம்மாய், குட்டை, குண்டு,தம்மம் என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வது தேவையாகின்றது. அவ்வகையில்  இந்நூல் குளப்பெயர்கள் குறித்த காரண காரியங்களை இயன்றளவில் ஆராய்கிறது வெளியீடு : காவ்யா பதிப்பகம், கோடம்பாக்கம், சென்னை.